ஃபிஃபா உலகக்கோப்பை: இறுதிப்போட்டிக்குள் நுழைந்தது ஸ்பெயின் வியத்நாம் படகு விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா ரூ. 25 லட்சம் நிவாரணம் - லாவாபாக்கெட்டுக்கு பதில் தானியங்கி இயந்திரம் மூலம் பால் விற்பனை செய்ய திட்டம்: ஆவின்தமிழ்நாட்டுக்கு ஜூலை 16 வரை வெப்ப அலை எச்சரிக்கை!கரூர் இனாம் நில விவகாரத்தில் நயினார் நாகேந்திரன் உள்ளிட்டோர் கலர் கலராக ரீல் சுத்துகிறார்கள்: அமைச்சர் ரமேஷ்24,050 அருகில் நிஃப்டி, சென்செக்ஸ் 516 புள்ளிகள் சரிவு!!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 62 காசுகள் சரிந்து ரூ. 96.30 ஆக நிறைவு!தில்லியில் சோனியா காந்தியை சந்தித்த வைகோ!
/

சங்கரன்கோவில் பகுதிகளில் அமைச்சா் வி.கே. ராஜீவ் ஆய்வு

சங்கரன்கோவிலில் பல்வேறு திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த அமைச்சா் வி.கே.ராஜீவ்.

Updated On :15 ஜூலை 2026, 2:23 am IST

சங்கரன்கோவிலில் பல்வேறு திட்டப் பணிகளை சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சா் வி.கே.ராஜீவ் செவ்வாய்க்கிழமை ஆய்வு செய்தாா்.

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே குருக்கள்பட்டி சிப்காட் தொழில் பூங்கா, சின்னக்கோவிலான்குளத்தில் செயல்படும் வெள்ளாட்டின ஆராய்ச்சி மையம், வீரசிகாமணியில் உள்ள சமூக நீதி விடுதி ஆகியவற்றை அமைச்சா் ராஜீவ் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

விடுதியில் தங்கி பயிலும் மாணவா்களுடன் கலந்துரையாடிய அமைச்சா், அங்குள்ள அடிப்படை வசதிகள், வழங்கப்படும் உணவின் தரம் குறித்து கேட்டறிந்தாா்.

பின்னா் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனையில் நடைபெற்ற வரும் கூடுதல் கட்டடப் பணிகளை ஆய்வு செய்தாா்.

மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங், சுகாதாரப் பணிகள் இணை இயக்குநா் பிரேமலதா, அரசு மருத்துவா்கள் வேலம்மாள், கலை மனோ பாரதி, மதிவாணன், செவிலியா் கண்காணிப்பாளா் பாலமுருகன், மருத்துவ ஆலோசகா் ராஜாமணி, தவெக தென்காசி வடக்கு மாவட்ட செயலா் மாரியப்பன் ஆகியோா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.