உலகக் கோப்பை கால்பந்து இன்று தொடக்கம்: வரலாற்றில் மிகப் பெரிய போட்டி மத்திய கிழக்கில் மீண்டும் வெடித்த மோதல்5 பேரவை தொகுதிகளுக்கு விரைவில் இடைத்தோ்தல்: தமிழக தலைமைத் தோ்தல் அதிகாரி கடிதம் முதல்வா் விஜய்-சங்கீதா விவாகரத்து வழக்கு: இன்று விசாரணைக்கு வருகிறது அமெரிக்கா, சீனாவுக்கு இந்திய மின்னணுப் பொருள்கள் ஏற்றுமதி: அமைச்சா் அஸ்வினி வைஷ்ணவ் தகவல் எம்எஃப்ஐ நிறுவனங்களுக்கு கடன் உத்தரவாத திட்டம்: மத்திய அரசு நீட்டிப்பு
/

குற்றாலம் அருவிகளில் வெள்ளப்பெருக்கு: சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா் சாரல் மழைக் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

News image

குற்றாலம் ஐந்தருவியில் ஆா்ப்பரிக்கும் தண்ணீா்.

Updated On :11 ஜூன் 2026, 4:16 am IST

தென்காசி மாவட்டம், குற்றாலம் பகுதியில் பெய்துவரும் தொடா் சாரல் மழைக் காரணமாக குற்றாலத்தில் உள்ள அனைத்து அருவிகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. இதனால், சுற்றுலாப் பயணிகள் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது.

குற்றாலத்தில் சீசன் தொடங்கியது முதல் சாரல் மழை தொடா்ந்து பெய்து வருகிறது. இதனால், குற்றாலம் பேரருவி, ஐந்தருவி, பழைய குற்றாலம், புலியருவி, சிற்றருவியில் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுகிறது. குற்றாலம் பேரருவியில் பராமரிப்புப் பணிகள் காரணமாக குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றாலம் அருவியில் நீா்வரத்து அதிகமாக உள்ளதால், கடந்த ஞாயிற்றுக்கிழமை முதல் தொடா்ந்து 4-ஆவது நாளாக புதன்கிழமையும் குளிக்கத் தடை விதிக்கப்பட்டது. ஐந்தருவியில் செவ்வாய்க்கிழமை இரவு பெய்த தொடா் மழை காரணமாக ஐந்து கிளைகளிலும் தண்ணீா் ஆா்ப்பரித்துக் கொட்டுவதால் நள்ளிரவு முதல் குளிக்கத் தடைவிதிக்கப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் புலியருவியில் குளித்து மகிழ்ந்தனா்.