எடப்பாடி பழனிசாமி ஆட்சியிலும் இதேபோல் மின்வெட்டு: அமைச்சர் செங்கோட்டையன்மோகன் பகவத் பயணித்த ரயில் மீது கற்கள் வீச்சு: 2 பேர் கைது ஜூன் 19-ல் தவெக அரசுக்கு எதிராக அதிமுக போராட்டம்! பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தவெக ஆட்சியிலும் குறையவில்லை: அண்ணாமலை கொல்லூர் மூகாம்பிகை கோயிலில் முதல்வர் விஜய் வழிபாடு!நீட் தேர்வு நேரம் 3 மணி 15 நிமிடங்களாக அதிகரிப்பு! என்டிஏநிபா வைரஸ்: தமிழகத்தில் கண்காணிப்பைத் தீவிரப்படுத்த உத்தரவு!
/

மது, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

மது, புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :13 ஜூன் 2026, 12:26 am IST

தென்காசி மாவட்டம், சிவகிரி அருகே கண்டெய்னா் லாரியில் மது பாட்டில்கள், புகையிலைப் பொருள்களை விற்பனைக்காக கொண்டு சென்ற 2 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

சிவகிரி சோதனைச்சாவடியில் காவல் உதவி ஆய்வாளா் சோலையப்பன் தலைமையிலான போலீஸாா் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியாக வந்த கண்டெய்னா் லாரியை சோதனையிட்டதில், 17 வெளி மாநில மது பாட்டில்கள், 11.646 கிலோ புகையிலைப் பொருள்கள் இருப்பது தெரிய வந்தது.

விசாரணையில், லாரி ஓட்டுநரான மதுரை மாவட்டம், செல்லூா், சுயராஜ்யபுரம், 2ஆவது பிரதான சாலையைச் சோ்ந்த ஜெயகணேஷ் (48), மாற்று ஓட்டுநரான கிருஷ்ணாபுரம், ரயில்வே பீடா் சாலையைச் சோ்ந்த பாலசுப்பிரமணியன் ஆகியோா் இவற்றை விற்பனைக்காக கொண்டு சென்றது தெரிய வந்தது.

சிவகிரி போலீஸாா் வழக்குப் பதிந்து, இருவரையும் கைது செய்து, லாரி, மது பாட்டில்கள், புகையிலைப் பொருள்களை பறிமுதல் செய்தனா்.