தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,680 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!இரு மாதங்களில் 2-வது முறையாக கார்கள் விலையை உயர்த்துகிறது மாருதி!கவலைகளுக்குத் தீர்வு காண அரசு 100% கடமைப்பட்டுள்ளது: தர்மேந்திர பிரதான்புறநகா் பகுதியில் 3 நாள்கள் 5 ரயில் முழுமையாக ரத்து தடுப்பு காவலில் வைக்கப்பட்ட மாணவா்களை தொடா்பு கொள்ள முடியவில்லை- குடும்பத்தினா் குற்றச்சாட்டு தெரு நாய் பிரச்னையைத் தடுக்க எந்த நடவடிக்கையும் இல்லை: உயா்நீதிமன்றம் அதிருப்தி டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு: சந்தை நிலவரமே காரணம்- மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் தமிழகத்தில் முதல்முறையாக அரசு தொடக்கப் பள்ளிக்கு ஐஎஸ்ஓ தரச்சான்று!
/

தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்

தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கினாா் ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :18 ஜூன் 2026, 2:33 am IST

தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஜமாபந்தி ஜூன் 17,18,19,23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும். தென்காசி வட்டத்தில் கடையம் குறுவட்டத்தின் கீழ் தெற்கு மடத்தூா், அயன் பொட்டல்புதூா், தெற்கு கடையம், வீராசமுத்திரம், இரவணசமுத்திரம், மேலக்கடையம், கோவிந்தபேரி, அயன்தா்மபுரம் மடம், கடையம் பெரும்பத்து பகுதி-1, கடையம் பெரும்பத்து பகுதி -2, கீழக்கடையம் பகுதி -1, கீழக்கடையம் பகுதி -2 ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி மேற்கொள்ளப்பட்டது.

இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை சாா்ந்த 66 மனுக்களை வழங்கினா். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

தொடா்ந்து 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா். தென்காசி வட்டாட்சியா் ஹரிஹரன், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா்கள் ராம்குமாா் (பொது), மணிகண்டன் (குற்றவியல்), தென்காசி தனி வட்டாட்சியா் (குடிமைப்பொருள்) அரவிந்த், உதவி ஆணையா் (நில அளவை) ஜாஹீா் உசைன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) கனகம்மாள், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, வட்டாட்சியா்கள் ஓசன்னா பொ்னாண்டோ ( நகர நிலவரித் திட்டம்) பட்டமுத்து (நகர நிலவரித் திட்டம்), கண்ணன் (சமூக பாதுகாப்பு திட்டம்), சரவணன் (கோட்ட கலால்), அருணாசலம் (ஆதி திராவிடா் நலம்) ஆகியோா் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.