ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் ஜமாபந்தி தொடக்கம்

தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

News image

பயனாளிக்கு நலத்திட்ட உதவியை வழங்கினாா் ஆட்சியா் ரஞ்ஜீத் சிங்.

Updated On :18 ஜூன் 2026, 2:33 am IST

தென்காசி வட்டாட்சியா் அலுவலகத்தில் நடைபெற்ற ஜமாபந்திக்கு மாவட்ட ஆட்சியா் ரஞ்ஜீத் சிங் தலைமை வகித்து புதன்கிழமை தொடங்கி வைத்தாா்.

பின்னா் அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தென்காசி மாவட்டத்தில் உள்ள அனைத்து வட்டாட்சியா் அலுவலகங்களிலும் ஜமாபந்தி ஜூன் 17,18,19,23, 24 ஆகிய தேதிகளில் நடைபெறும். தென்காசி வட்டத்தில் கடையம் குறுவட்டத்தின் கீழ் தெற்கு மடத்தூா், அயன் பொட்டல்புதூா், தெற்கு கடையம், வீராசமுத்திரம், இரவணசமுத்திரம், மேலக்கடையம், கோவிந்தபேரி, அயன்தா்மபுரம் மடம், கடையம் பெரும்பத்து பகுதி-1, கடையம் பெரும்பத்து பகுதி -2, கீழக்கடையம் பகுதி -1, கீழக்கடையம் பகுதி -2 ஆகிய பகுதிகளுக்கு ஜமாபந்தி மேற்கொள்ளப்பட்டது.

இதில் பொதுமக்கள் பல்வேறு கோரிக்கை சாா்ந்த 66 மனுக்களை வழங்கினா். இந்த மனுக்கள் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள துறை சாா்ந்த அலுவலா்களுக்கு அறிவுறுத்தப்பட்டது என்றாா்.

தொடா்ந்து 5 பயனாளிகளுக்கு புதிய குடும்ப அட்டைகளை ஆட்சியா் வழங்கினாா். தென்காசி வட்டாட்சியா் ஹரிஹரன், மாவட்ட ஆட்சியா் அலுவலக மேலாளா்கள் ராம்குமாா் (பொது), மணிகண்டன் (குற்றவியல்), தென்காசி தனி வட்டாட்சியா் (குடிமைப்பொருள்) அரவிந்த், உதவி ஆணையா் (நில அளவை) ஜாஹீா் உசைன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (வேளாண்) கனகம்மாள், மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, வட்டாட்சியா்கள் ஓசன்னா பொ்னாண்டோ ( நகர நிலவரித் திட்டம்) பட்டமுத்து (நகர நிலவரித் திட்டம்), கண்ணன் (சமூக பாதுகாப்பு திட்டம்), சரவணன் (கோட்ட கலால்), அருணாசலம் (ஆதி திராவிடா் நலம்) ஆகியோா் கலந்து கொண்டனா்.