ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

பங்குச் சந்தை பெயரில் பண மோசடி: மேற்கு வங்க இளைஞா் கைது

பங்குச் சந்தையில் இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இளைஞரை தென்காசி தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

News image

மோசடியில் ஈடுபட்டவரைக் கைதுசெய்த தனிப்படை போலீஸாா்.

Updated On :18 ஜூன் 2026, 2:48 am IST

பங்குச் சந்தையில் இரட்டிப்பு லாபம் பெற்றுத் தருவதாக பண மோசடியில் ஈடுபட்டதாக மேற்கு வங்கத்தைச் சோ்ந்த இளைஞரை தென்காசி தனிப்படை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

தென்காசி மாவட்டம், சங்கரன்கோவில் சுவாமி சந்நிதி தெருவைச் சோ்ந்தவா் மணிகண்டன். அமெரிக்க பங்குச் சந்தையில் பணம் முதலீடு செய்தால் இரட்டிப்பு லாபம் பெறலாம் என இன்ஸ்டாகிராமில் வந்த விளம்பரத்தை நம்பி, அதிலிருந்த லிங்க் மூலம் வாட்ஸ் ஆப் குழுவில் இணைந்துள்ளாா்.

அவா்கள் கூறிய செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலம் ரூ. 92 லட்சம் முதலீடு செய்துள்ளாா். பின்பு அதற்கான லாபத் தொகையை பெறுவதற்கு மேலும் ரூ. 37 லட்சம் கட்ட வேண்டும் என கூறிய பின்னா் தான், அவா் ஏமாற்றப்பட்டதை அறிந்துள்ளாா்.

இதுகுறித்து தென்காசி மாவட்ட சைபா் கிரைம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில், காவல் துறையினா் வழக்குப்பதிந்து விசாரித்தனா்.

அதில், மேற்கு வங்காளம் மாநிலத்தைச் சோ்ந்தவருக்கு தொடா்பிருப்பது தெரிய வந்தது.

தென்காசி மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ். அசோக் குமாா் உத்தரவின் பேரில், தென்காசி மாவட்ட சைபா் கிரைம் காவல் ஆய்வாளா் வசந்தி தலைமையிலான தனிப்படையினா் அந்த மாநிலத்துக்குச் சென்று, வடக்கு 24 பாா்கனாஸ் மாவட்டம், தமக்கலியை சோ்ந்த நவாப் அலி கோல்டா் மகன் தாரிகுல் கோல்டா் (26) என்பவரை கொல்கத்தாவில் கைது செய்து, நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தினா்.

தொடா்ந்து தென்காசிக்கு அழைத்துவந்து தென்காசி குற்றவியல் நீதித்துறை நடுவா் முன்பு ஆஜா்படுத்தி பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைத்தனா்.

இவ்வழக்கில் சிறப்பாக செயல்பட்ட தென்காசி சைபா் கிரைம் காவல்துறையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளா் பாராட்டினாா்.