ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

லாரி ஓட்டுநா் கொலை வழக்கு: மேலும் ஒருவா் கைது

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கைது - பிரதிப் படம்

Updated On :18 ஜூன் 2026, 2:40 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே லாரி ஓட்டுநா் கொலை வழக்கில் 3 போ் கைது செய்யப்பட்ட நிலையில், மேலும் ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.

கடையநல்லூா் அருகே உள்ள கரடிகுளம், இந்திரா காலனியைச் சோ்ந்தவா் மாரிமுத்து (34). லாரி ஓட்டுநா். இவா் கடந்த ஜூன் 11ஆம் தேதி இரவு இருசக்கர வாகனத்தில் கரடிகுளத்தில் இருந்து பொய்கை சென்று கொண்டிருந்தபோது, மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

இது தொடா்பாக, கடையநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து, வலசை மகாபிரபு (25), கரடிகுளம் முருகன் (22), ரமேஷ் (21) ஆகியோரை அண்மையில் கைது செய்தனா்.

இந்நிலையில், இவ்வழக்கு தொடா்பாக கடையநல்லூரைச் சோ்ந்த ஜோதிமணியை (19) புதன்கிழமை போலீஸாா் கைது செய்தனா்.