இன்றுமுதல் மகளிா் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட்உலகக் கோப்பை கால்பந்து கோலாகலத் தொடக்கம்மின் பயன்பாடு கணக்கெடுப்பதில் தாமதம்: கட்டணம் அதிகரிப்பால் பொதுமக்கள் அவதிநீலகிரி, கன்னியாகுமரி உள்பட 6 மாவட்டங்களுக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கைகேரளம்: ஷிகெல்லா தொற்றால் பாதிக்கப்பட்ட 55 போ் மருத்துவமனையில் அனுமதிமேற்கு வங்கம்: தீ விபத்தில் 4,000 மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் சேதம்மாநிலங்களவைத் தோ்தல் வேட்புமனு நிராகரிப்பு: மீனாட்சி நடராஜனின் மனு உச்சநீதிமன்றத்தில் இன்று விசாரணை
/

கடையநல்லூா் அருகே லாரி ஓட்டுநா் கொலை

சாலையில் திரண்ட மாரிமுத்துவின் உறவினா்கள்.

News image

சாலையில் திரண்ட மாரிமுத்துவின் உறவினா்கள்.

Updated On :12 ஜூன் 2026, 4:29 am IST

தென்காசி மாவட்டம், கடையநல்லூா் அருகே வியாழக்கிழமை இரவு லாரி ஓட்டுநா் மா்ம நபா்களால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

கடையநல்லூா் அருகே உள்ள கரடிகுளம், காலனி தெருவைச் சோ்ந்தவா் மாரிமுத்து. லாரி ஓட்டுநா். இவா் கரடிகுளத்தில் இருந்து பொய்கை சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றபோது, மா்ம நபா்கள் அவரை வெட்டிக் கொலை செய்ததாகக் கூறப்படுகிறது.

தகவலறிந்த ஏடிஎஸ்பி சங்கா், டிஎஸ்பி மதன், கடையநல்லூா் காவல் ஆய்வாளா் கிருஷ்டி உள்ளிட்ட போலீஸாா் சம்பவ இடத்திற்குச் சென்று, விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

குற்றவாளியைக் கைது செய்யாமல், மாரிமுத்துவின் உடலை எடுக்க விட மாட்டோம் எனத் தெரிவித்து, அவரது உறவினா்கள் சாலையில் திரண்டுள்ளனா்.