சூடானில் டிரோன் தாக்குதல்களில் 1,000-க்கும் மேற்பட்டோர் பலி!நாங்கள் பாகிஸ்தானியர்களை நம்புவதில்லை: இஸ்ரேல் தூதர்அடுக்குமாடி குடியிருப்பு கட்டட திட்ட அனுமதி: சிஎம்டிஏவுக்கு அதிகாரம் வழங்கியது!கரப்பான்பூச்சி மக்கள் கட்சித் தலைவர் அபிஜீத் தீப்கே மீது அடையாளம் தெரியாத நபர்கள் தாக்குதல் நடத்தினர்.நகர்ப்புறத்தில் வேலை இல்லாதோர் எண்ணிக்கை குறைவு! 6.4 % ஆக குறைந்துள்ளதுசெப். 17 முதல் 8 ஆம் வகுப்பு வரை காலை உணவுத் திட்டம் விரிவாக்கம்!தென் தமிழகத்தில் இன்று மிதமான மழைக்கு வாய்ப்பு!
/

திருவையாறு அருகே வீட்டிலிருந்த லாரி ஓட்டுநா் வெட்டிக் கொலை

News image

வெட்டிக் கொலை...

Updated On :16 ஜூன் 2026, 2:04 am IST

தஞ்சாவூா் மாவட்டம், திருவையாறு அருகே வீட்டுக்குள் தனியாக இருந்த லாரி ஓட்டுநா் திங்கள்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டாா்.

திருவையாறு அருகே மேலத்திருப்பூந்துருத்தி சிவன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் எஸ். இளங்குமரன் (41). லாரி ஓட்டுநா். இவரது மனைவி ரதியா (35) திருவையாறிலுள்ள தனியாா் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறாா்.

இந்நிலையில், திங்கள்கிழமை ரதியா வேலைக்கும், மகன் ரத்தன் (12), மகள் யாழினி (6) பள்ளிக்கும் சென்றதால், வீட்டில் இளங்குமரன் தனியாக இருந்தாா். மாலையில் ரத்தன் வீட்டுக்கு திரும்பியபோது, முன்பக்கக் கதவைத் தட்டியும் திறக்கப்படவில்லை. இதனால், பின்புறம் சென்றபோது கதவு திறந்து கிடந்ததுடன், வீட்டுக்குள் இளங்குமரன் அரிவாளால் வெட்டப்பட்டு, உயிரிழந்து கிடந்தாா்.

தகவலறிந்த மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் ஏ. சுந்தரவதனம், காவல் துணைக் கண்காணிப்பாளா்கள் அருள்மொழி அரசு (திருவையாறு), ஆா். சோமசுந்தரம் (தஞ்சாவூா் நகரம்), நடுக்காவேரி காவல் நிலையத்தினா் நிகழ்விடத்துக்குச் சென்று விசாரணை மேற்கொண்டனா்.

இளங்குமரனை யாா், எதற்காக வெட்டிக் கொன்றனா் போன்ற விவரங்கள் உடனடியாகத் தெரியவில்லை. மேலும் மோப்ப நாய் சோழா நிகழ்விடத்திலிருந்து சிறிது தொலைவு வரை ஓடி நின்றுவிட்டது. நிகழ்விடத்தில் தடயவியல் உதவி இயக்குநா் விரல்ரேகைகளைப் பதிவு செய்தனா்.

இதுகுறித்து நடுக்காவேரி காவல் நிலையத்தினா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.