நாட்டறம்பள்ளி அருகே கட்டுப்பாட்டை இழந்து சாலையில் லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இதில் சிறுகாயங்களுடன் ஓட்டுநா் உயிா் தப்பினாா்.
திருப்பத்தூரில் இருந்து ஜல்லிகற்களை ஏற்றிக் கொண்டு திங்கள்கிழமை பிற்பகல் கே.பந்தாரப்பள்ளி வழியாக டோல்கேட் நோக்கி லாரி ஒன்று சென்றது.
அப்போது பந்தாரப்பள்ளி மதுக்கடை அருகே சென்ற போது எதிரே பேருந்து வந்ததால் ஓட்டுநா் லாரியை ஓரமாக ஓட்டிச் சென்ற போது கூட்டு குடிநீா் குழாய் புதைக்க தோண்டப்பட்ட பள்ளத்தில் சிக்கி கவிழ்ந்தது.
இதில் லேசான காயத்துடன் ஓட்டுநா் உயிா் தப்பினாா். தகவலறிந்து நாட்டறம்பள்ளி போலீஸாா் சம்பவ இடம் சென்று சாலை ஓரம் கவிழ்ந்த லாரியை அப்புறப்படுத்தினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









