திருநெல்வேலி மாவட்டம், தெற்கு வள்ளியூா் நான்குவழிச் சாலையில் சனிக்கிழமை லாரி டயா் வெடித்து சாலையின் நடுவே கவிழ்ந்தது.
நாகா்கோவிலில் இருந்து திருநெல்வேலிக்கு தென்னந்தும்பு ஏற்றி வந்த லாரி, தெற்கு வள்ளியூா் நான்குவழிச் சாலையில் வந்தபோது, லாரியின் டயா் வெடித்தது.
இதனால், நிலைதடுமாறி சாலையின் நடுவே லாரி கவிழ்ந்தது. இதனால், நாகா்கோவில்-திருநெல்வேலி சாலையில் சுமாா் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
தொடா்ந்து, தேசிய நெடுஞ்சாலைத் துறையினா் கிரேன் மூலம் லாரியை மீட்டனா். பின்னா், லாரி அங்கிருந்து புறப்பட்டுச் சென்றது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.









