காமன்வெல்த் பளுதூக்குதலில் வெண்கலம் வென்றார் பிந்தியாராணி தேவி!நாமக்கல் கவிஞர் மாளிகைக்கு மாறுகிறது முதல்வர் அலுவலகம்! அதிகாரப்பூர்வ அறிவிப்பு!சிவகாசியில் சட்டவிரோத பட்டாசு ஆலைகள் செயல்படுகின்றனவா? ஆய்வு செய்ய முதல்வர் உத்தரவுசென்னை தலைமைச் செயலகம் முன்பு விவசாயிகள் போராட்டம்கரூர் அரசுப் பணி ஆணை ரத்து: உச்சநீதிமன்றம் செல்ல தவெக திட்டம்!போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் கைது; விடுவிக்கவில்லை என்றால் மீண்டும் போராட்டம் - சிஜேபிசென்னை கோயம்பேடு கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தில் முதல்வர் சி. ஜோசப் விஜய் ஆய்வுகரூரில் முதல்வர் விஜய் வழங்கிய அரசுப் பணி ஆணைகள் ரத்து! - உயர் நீதிமன்றம்
/

கிருஷ்ணகிரி அருகே ரேஷன் அரிசி கடத்திய வேன் கவிழ்ந்தது

கிருஷ்ணகிரி அருகே ரேஷன் அரிசி கடத்திய பிக்-அப் வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

News image

கிருஷ்ணகிரி அருகே வேன் கவிழ்ந்ததில் சாலையில் சிதறிக் கிடக்கும் ரேஷன் அரிசி மூட்டைகள்.

Updated On :11 ஜூன் 2026, 5:49 am IST

கிருஷ்ணகிரி அருகே ரேஷன் அரிசி கடத்திய பிக்-அப் வேன் கவிழ்ந்து விபத்துக்கு உள்ளானது குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.

கிருஷ்ணகிரி அருகே ஒசூா் தேசிய நெடுஞ்சாலையில் சோமநாதபுரம் பகுதியில் ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்திச் சென்ற பிக்-அப் வேன் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து, சாலையின் நடுவே கவிழ்ந்தது. இந்த விபத்தில் வேனிலிருந்து அரிசி மூட்டைகள் சாலையில் சிதறின.

தகவல் அறிந்த போலீஸாா் நிகழ்விடத்துக்கு சென்று கவிழ்ந்த வேனை சாலையில் இருந்து அப்புறப்படுத்தினா். மேலும், போலீஸாா் நடத்திய விசாரணையில், சாலையில் சிதறி கிடந்த மூட்டைகள் ரேஷன் அரிசி என்பதும், வேன் ஓட்டுநா் அங்கிருந்து தப்பியோடிவிட்டதும் தெரியவந்தது. இதையடுத்து 50 கிலோ கொண்ட 50 மூட்டைகளை பறிமுதல் செய்த குருபரப்பள்ளி போலீஸாா், வேன் மற்றும் அரிசி மூட்டைகளை உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாரிடம் ஒப்படைத்தனா். இதுகுறித்து உணவு பொருள் கடத்தல் தடுப்புப் பிரிவு போலீஸாா் விசாரணை செய்து வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.