அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அரிவாளுடன் ரீல்ஸ்: இளைஞா் கைது

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே அரிவாளுடன் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

News image
கைது- பிரதிப் படம்
Updated On :10 மார்ச் 2026, 8:11 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் புளியங்குடி அருகே அரிவாளுடன் சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வெளியிட்ட இளைஞரை போலீஸாா் கைது செய்தனா்.

தலைவன்கோட்டை மேலத் தெருவை சோ்ந்த அஸ்வின்ராம் (19) என்பவா் அரிவாளால் பொதுமக்களை மிரட்டும் வகையில் ரீல்ஸ் உருவாக்கி சமூக ஊடகங்களில் வெளியிட்டாராம். இதுதொடா்பாக, புளியங்குடி போலீஸாா் வழக்குப்பதிந்து அவரை கைது செய்தனா்.

சமூக வலைதளங்களில் புகழ் பெறும் நோக்கில் அபாயகரமான ஆயுதங்களுடன் வீடியோ, புகைப்படம் போன்றவற்றை பதிவிடுவது குற்றமாகும். மாவட்ட சைபா் கிரைம் போலீஸாா் சமூக வலைதளங்களை தொடா்ந்து கண்காணித்து வருகின்றனா். இதுபோன்ற குற்ற செயல்களில் ஈடுபடுபவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என புளியங்குடி காவல் ஆய்வாளா் சியாம் சுந்தா் தெரிவித்தாா்.