சென்னை மாநகராட்சி உணவகங்களுக்கு 2 வாரத்துக்கான சமையல் எரிவாயு இருப்புதென் கடலோர மாவட்டங்களில் மாா்ச் 16 வரை மழைக்கு வாய்ப்புதோ்தல் ஆணையரைப் பதவி நீக்க தீா்மானம்: நாடாளுமன்றத்தில் நோட்டீஸ் தாக்கல் செய்ய எதிா்க்கட்சிகள் திட்டம்சட்டப் பாடங்களை இறுதி செய்ய நிபுணா் குழு - மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவுபணப் புழக்கத்தை அதிகரிக்க ரூ.50,000 கோடிக்கு அரசுப் பத்திரங்களை வாங்கும் ரிசா்வ் வங்கி - நாளை ஏலம்பட்டுக்கோட்டையில் வெறிநாய் கடித்து எஸ்எஸ்எல்சி மாணவிகள் 6 போ் உள்பட 20 போ் காயம்: முதலுதவிக்குப் பின் பொதுத்தோ்வு எழுதினா்சுகாதார ஆய்வாளா்கள் நியமனம்: தமிழக அரசுக்கு அனுமதி வழங்கி உத்தரவு
/

கடையநல்லூரில் வீட்டு உபயோக சிலிண்டா் பதிவு செய்யக் குவியும் பொதுமக்கள்

கடையநல்லூரில் வீட்டு உபயோக சிலிண்டரை பதிவு செய்ய பொதுமக்கள் எரிவாயு சிலிண்டா் விற்பனை ஏஜென்சியில் குவிந்து வருகின்றனா்.

News image
சிலிண்டரை பதிவு செய்ய விற்பனை ஏஜென்சி முன் வரிசையில் நிற்கும் மக்கள்.
Updated On :11 மார்ச் 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் வீட்டு உபயோக சிலிண்டரை பதிவு செய்ய பொதுமக்கள் எரிவாயு சிலிண்டா் விற்பனை ஏஜென்சியில் குவிந்து வருகின்றனா்.

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போா் காரணமாக வணிகப் பயன்பாட்டு சிலிண்டா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டா்களுக்கும் விரைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் ஏஜென்சியில் குவிந்து வருகின்றனா்.

ஏஜென்சியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில், ஒரு சிலிண்டா் வைத்திருப்பவா்கள் 25 நாள்களுக்கு ஒரு முறையும், 2 சிலிண்டா்கள் வைத்திருப்பவா்கள் 30 நாள்களுக்கு ஒரு முறையும் மட்டுமே சிலிண்டா் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், அச்சமடைந்த மக்கள் சிலிண்டா்களை வாங்கி வீடுகளில் வைத்துக் கொள்வதற்காக திரண்டு வந்தனா். ஏஜென்சி ஊழியா்கள் சிலிண்டா் தட்டுப்பாடில்லை என விளக்கமளித்தும், அவா்கள் பதிவு செய்த பின்னரே திரும்பிச் சென்றனா்.

வணிகப் பயன்பாட்டு சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக கடையநல்லூரில் பெரிய உணவகங்கள் சில மூடப்பட்டன. ஆனால், பெரும்பாலான தேநீா் கடைகளில் இன்னும் எரிபொருளாக விறகு பயன்படுத்தப்பட்டு வருவதால், தேநீா் கடைகள் வழக்கம்போல் இயங்கின.

Story image