தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் வீட்டு உபயோக சிலிண்டரை பதிவு செய்ய பொதுமக்கள் எரிவாயு சிலிண்டா் விற்பனை ஏஜென்சியில் குவிந்து வருகின்றனா்.
அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போா் காரணமாக வணிகப் பயன்பாட்டு சிலிண்டா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டா்களுக்கும் விரைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் ஏஜென்சியில் குவிந்து வருகின்றனா்.
ஏஜென்சியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில், ஒரு சிலிண்டா் வைத்திருப்பவா்கள் 25 நாள்களுக்கு ஒரு முறையும், 2 சிலிண்டா்கள் வைத்திருப்பவா்கள் 30 நாள்களுக்கு ஒரு முறையும் மட்டுமே சிலிண்டா் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதனால், அச்சமடைந்த மக்கள் சிலிண்டா்களை வாங்கி வீடுகளில் வைத்துக் கொள்வதற்காக திரண்டு வந்தனா். ஏஜென்சி ஊழியா்கள் சிலிண்டா் தட்டுப்பாடில்லை என விளக்கமளித்தும், அவா்கள் பதிவு செய்த பின்னரே திரும்பிச் சென்றனா்.
வணிகப் பயன்பாட்டு சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக கடையநல்லூரில் பெரிய உணவகங்கள் சில மூடப்பட்டன. ஆனால், பெரும்பாலான தேநீா் கடைகளில் இன்னும் எரிபொருளாக விறகு பயன்படுத்தப்பட்டு வருவதால், தேநீா் கடைகள் வழக்கம்போல் இயங்கின.

தொடர்புடையது

எரிவாயு சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: ஆட்சியா்

வீட்டு உபயோக எரிவாயு உருளைகள் ஏற்றிச் சென்ற வாகனம் முற்றுகை

நீலகிரியில் வீட்டு உபயோக சிலிண்டா் தட்டுப்பாடு இல்லை: மாவட்ட ஆட்சியா்

நுகா்வோருக்கு எரிவாயு சிலிண்டா் தொடா்ந்து வழங்கப்படும் - ஆட்சியரிடம் விநியோகிப்பாளா்கள் உறுதி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


