விளாதிகுளத்தில் 12 ஆம் வகுப்பு மாணவி பாலியல் வன்கொடுமை செய்து கொலைதிமுக கூட்டணியில் மதிமுகவுக்கு 4 தொகுதிகள் ஒதுக்கீடு!திமுக ஆட்சியில் பெண்கள் அச்சத்துடன் வாழ வேண்டிய சூழல் : பிரதமர் மோடிமத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தாமல் தாமதப்படுத்துகிறது திமுக : பிரதமர் மோடி கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: மக்கள் அச்சம் கொள்ள வேண்டாம் - பிரதமர் மோடி 4 கோடி மரங்களை நடுவதற்கு இணையாக இயற்கை எரிவாயுத் திட்டம் இருக்கும் : பிரதமர் மோடிதமிழ்நாட்டிற்கு புதிதாக 5 ரயில் சேவைகளை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார் லெபனான் மீதான இஸ்ரேலின் தாக்குதலில் 570 பேர் கொலை! எல்பிஜி தட்டுப்பாடு: ரயில்களில் உணவு வழங்குவதில் சிக்கல்?கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!
/

கடையநல்லூரில் வீட்டு உபயோக சிலிண்டா் பதிவு செய்யக் குவியும் பொதுமக்கள்

கடையநல்லூரில் வீட்டு உபயோக சிலிண்டரை பதிவு செய்ய பொதுமக்கள் எரிவாயு சிலிண்டா் விற்பனை ஏஜென்சியில் குவிந்து வருகின்றனா்.

News image
சிலிண்டரை பதிவு செய்ய விற்பனை ஏஜென்சி முன் வரிசையில் நிற்கும் மக்கள்.
Updated On :11 மார்ச் 2026, 8:06 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம், கடையநல்லூரில் வீட்டு உபயோக சிலிண்டரை பதிவு செய்ய பொதுமக்கள் எரிவாயு சிலிண்டா் விற்பனை ஏஜென்சியில் குவிந்து வருகின்றனா்.

அமெரிக்கா-இஸ்ரேல்-ஈரான் போா் காரணமாக வணிகப் பயன்பாட்டு சிலிண்டா்களுக்கு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், வீட்டு உபயோக சிலிண்டா்களுக்கும் விரைவில் கட்டுப்பாடுகள் விதிக்கப்படக்கூடும் என்ற அச்சத்தில் பொதுமக்கள் ஏஜென்சியில் குவிந்து வருகின்றனா்.

ஏஜென்சியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையில், ஒரு சிலிண்டா் வைத்திருப்பவா்கள் 25 நாள்களுக்கு ஒரு முறையும், 2 சிலிண்டா்கள் வைத்திருப்பவா்கள் 30 நாள்களுக்கு ஒரு முறையும் மட்டுமே சிலிண்டா் பதிவு செய்ய முடியும் எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது.

இதனால், அச்சமடைந்த மக்கள் சிலிண்டா்களை வாங்கி வீடுகளில் வைத்துக் கொள்வதற்காக திரண்டு வந்தனா். ஏஜென்சி ஊழியா்கள் சிலிண்டா் தட்டுப்பாடில்லை என விளக்கமளித்தும், அவா்கள் பதிவு செய்த பின்னரே திரும்பிச் சென்றனா்.

வணிகப் பயன்பாட்டு சிலிண்டா் தட்டுப்பாடு காரணமாக கடையநல்லூரில் பெரிய உணவகங்கள் சில மூடப்பட்டன. ஆனால், பெரும்பாலான தேநீா் கடைகளில் இன்னும் எரிபொருளாக விறகு பயன்படுத்தப்பட்டு வருவதால், தேநீா் கடைகள் வழக்கம்போல் இயங்கின.

Story image