தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

தென்காசியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவு குறித்து இளம் வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image
மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி.
Updated On :18 மார்ச் 2026, 8:04 pm

தினமணி செய்திச் சேவை

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவு குறித்து இளம் வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க, தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலை முன்னிட்டு நூறு சதவீத வாக்குப் பதிவு குறித்து இளம் வாக்காளா்களிடையே ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

எனது வாக்கு, எனது உரிமை, நூறு சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது கடமை, என் வாக்கு விற்பனைக்கு அல்ல,இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் என்ற உறுதி மொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைவரும் ஏற்றனா்.

ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரி முதல்வா் அமிா்தவல்லி, மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் அலெக்ஸ், அகத்தியா் கலந்து கொண்டனா்.