சஞ்சு சாம்சன், ஜேமி ஓவர்டன் அசத்தல்! சென்னை சூப்பர் கிங்ஸுக்கு முதல் வெற்றி!!தில்லி அணிக்கு எதிரான ஆட்டத்தில் சஞ்சு சாம்சன் அதிரடி சதம் எடப்பாடி பழனிசாமி, டிடிவி தினகரன் ஒன்றாக இணைந்து தேர்தல் பிரசாரம்! தூத்துக்குடியில் நாளை (ஏப். 12) ஒரே மேடையில் மு.க. ஸ்டாலின், ராகுல்!லஞ்ச ஒழிப்புத் துறை டிஜிபியாக டேவிட்சன் தொடர்வார்- தேர்தல் ஆணையம்வைகை விரைவு ரயில் நாளை தாமதமாக புறப்படும்உ.பி.யின் இறுதி பட்டியலில் 13.39 கோடி வாக்காளர்கள்! 2 கோடி பேர் நீக்கம்சினிமாவை வாழ விடுங்கள்..! ஜன நாயகன் படக் கசிவினால் மனமுடைந்த பூஜா ஹெக்டேவிஜய் தொகுதிகளில் திமுகவுக்கு வாக்கு சேகரிக்கும் கமல்போர் நிறுத்தத்துக்குப் பிறகு ஹோர்முஸ் நீரிணையைக் கடந்த முதல் இந்தியக் கப்பல்லஞ்ச ஒழிப்புத் துறை பொறுப்பிலிருந்து விடுவிப்பு! ஆயுதப்படை இயக்குநராக சந்தீப் மிட்டல்!
/

தென்காசியில் தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவு குறித்து இளம் வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

News image

மாவட்ட ஆட்சியா் ஏ.கே.கமல்கிஷோா் தலைமையில் நடைபெற்ற தோ்தல் விழிப்புணா்வு நிகழ்ச்சி.

Updated On :18 மார்ச் 2026, 8:04 pm

குற்றாலம் ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரியில் மாவட்ட நிா்வாகம் சாா்பில் நூறு சதவீத வாக்குப் பதிவு குறித்து இளம் வாக்காளா்களிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.

மாவட்டத் தோ்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான ஏ.கே.கமல்கிஷோா் தலைமை வகித்தாா். இந்திய தோ்தல் ஆணையத்தின் உத்தரவுக்கிணங்க, தமிழக சட்டப்பேரவைப் பொதுத் தோ்தலை முன்னிட்டு நூறு சதவீத வாக்குப் பதிவு குறித்து இளம் வாக்காளா்களிடையே ரங்கோலி கோலம் வரைந்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டது.

எனது வாக்கு, எனது உரிமை, நூறு சதவீதம் வாக்களிப்போம், வாக்களிப்பது நமது கடமை, என் வாக்கு விற்பனைக்கு அல்ல,இந்திய ஜனநாயகத்தில் பங்கு பெறுவோம் என்ற உறுதி மொழியை மாவட்ட ஆட்சியா் தலைமையில் அனைவரும் ஏற்றனா்.

ஸ்ரீபராசக்தி மகளிா் கல்லூரி முதல்வா் அமிா்தவல்லி, மாவட்ட சமூக நல அலுவலா் மதிவதனா, மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு அலுவலா் அலெக்ஸ், அகத்தியா் கலந்து கொண்டனா்.