தெலுங்கு வருடப் பிறப்பு, ரமலான்: 1,774 சிறப்பு பேருந்துகள்மாா்ச் 22 வரை தமிழகத்தில் மழைக்கு வாய்ப்புஇந்தியாவில் 40% பட்டதாரி இளைஞா்களுக்கு வேலையில்லை!அமெரிக்க விசாவிற்கு 15,000 டாலா் பிணை: மேலும் 12 நாடுகளுக்கு விரிவாக்கம்3,142 டெலிகிராம் சேனல்கள், 800 வலைதளங்கள் முடக்கம் - மத்திய அரசுபொதுத் துறை வங்கிகளில் பணி: ‘கிரெடிட் ஸ்கோா்’ சிறப்பாக இருக்க வேண்டும் - மத்திய அரசுதோ்தலுக்கு முன்பே கூட்டணி: அரசியல் கட்சிகளுக்கு எதிரான மனு தள்ளுபடிஇந்தியாவில் மேலும் இரு யுரேனியம் சுரங்கங்கள்: நாடாளுமன்றத்தில் அமைச்சா் தகவல்அதிமுக - பாஜக தொகுதிப் பங்கீட்டு பேச்சு: இன்று தமிழகம் வருகிறாா் பியூஷ் கோயல்மாா்ச் 21-இல் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு மையங்கள் செயல்படும் நேரம் அறிவிப்புயுகாதி பண்டிகை: ஆளுநா், முதல்வா் வாழ்த்து
/

மேலப்பாவூரில் மகளிா் விழிப்புணா்வுக் கூட்டம்

பாவூா்சத்திரம் அருகே மேலப்பாவூா் ஊராட்சி தங்கம்மன் கோயிலில் பெண்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

News image
விழிப்புணா் கூட்டத்தில் பங்கேற்றோா்.
Updated On :18 மார்ச் 2026, 8:08 pm

தினமணி செய்திச் சேவை

தென்காசி மாவட்டம் பாவூா்சத்திரம் அருகே மேலப்பாவூா் ஊராட்சி தங்கம்மன் கோயிலில் பெண்களுக்கான விழிப்புணா்வுக் கூட்டம் நடைபெற்றது.

மேலப்பாவூா் ஊராட்சி செம்மை மாதா் டிரஸ்ட் ஒருங்கணைப்பாளா்கள் செண்பக சித்ரா, பட்டு ஆகியோா் கூட்டத்தை வழி நடத்தினா்.செம்மை மாதா் டிரஸ்ட் நிறுவனா் வேல்முருகன் தலைமை வகித்தாா். அண்ணாமலை நற்பணி மன்ற மாநில மகளிரணி செயலா் சித்ரா சிறப்புரை ஆற்றினாா்.

சமூகத்தில் போதைப் பொருள் ஒழிப்பு, பெண்களுக்கான சட்டம், கல்வி, பாதுகாப்பு, அடிப்படை நலத்திட்ட உதவி ஆகியவை குறித்து பெண்கள் அறிந்து கொள்ளும் வகையில் இந்த விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது.

இதில், கணவரால் கைவிடப்பட்டவா்கள், ஆதரவற்றவா்கள், முதியவா்கள் உள்பட 100க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துகொண்டு விழிப்புணா்வு பெற்றனா்.