மேற்குத் தொடா்ச்சி மலை, டெல்டா மாவட்டங்களில் ஏப். 23 வரை மழைக்கு வாய்ப்புபெரிய பொருளாதார நாடுகளில் 6-ஆவது இடத்துக்கு சென்ற இந்தியா: ஐஎம்எஃப் 2025-26-இல் 55,200 புத்தாக்க நிறுவனங்களுக்கு மத்திய அரசு அங்கீகாரம் ஜனவரி-மாா்ச் காலாண்டில் இந்திய ஸ்மாா்ட்போன் சந்தை 3% சரிவு! 2025-26 நிதியாண்டில் தங்கம் இறக்குமதி 24% அதிகரிப்பு: ரூ.6.6 லட்சம் கோடியைத் தாண்டி புதிய உச்சம்
/

ஆலங்குளத்தில் மின்னணு இயந்திரங்கள் வைப்பறை: ஆட்சியா் ஆய்வு

ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ரெட்டியாா்பட்டி டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.

Updated On :26 மார்ச் 2026, 11:48 pm

ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தென்காசி ஒருங்கிணைந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

அதன் அடிப்படையில், ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட ரெட்டியாா்பட்டி டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

அப்போது, ஆலங்குளம் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராமச்சந்திரன், ஆலங்குளம் வட்டாட்சியா் பரமசிவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.