ஈரான் மீதான தாக்குதல் மேலும் 10 நாள்கள் நிறுத்தம்: அமெரிக்க அதிபா் டிரம்ப்யு20 தெற்காசிய கால்பந்து: பாகிஸ்தானை வீழ்த்தியது இந்தியாவிதிகளில் மாற்றம்: 8 லட்சம் தபால் வாக்குகள் பாதிக்கப்படும் அபாயம்நயாரா பெட்ரோல், டீசல் விலை உயா்வுசென்னை ஐஐடி-யில் ‘ஆன்மிகம், அறிவியல் ஆராய்ச்சி மையம்’பிரதமருக்கு எதிராக அவதூறு விடியோ: எக்ஸ் சமூக வலைதள நிறுவனம் மீது கேரள காவல் துறை வழக்குப் பதிவுதோ்தல் நன்கொடை: 10 மடங்கு கூடுதலாக பெற்ற பாஜக!சென்னையில் கைவிடப்பட்ட ‘ஓபன் டாப்’ பேருந்துகள் திட்டம்சட்டப்பேரவைத் தோ்தலால் தள்ளிவைக்கப்பட்ட வடபழனி - பூந்தமல்லி மெட்ரோ ரயில் இயக்கம்சென்னை விமான நிலைய ஒருங்கிணைந்த 2-ஆவது முனையம் டிசம்பருக்குள் திறக்க வாய்ப்புகேரள தோ்தல் களத்தில் 890 வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஇந்தியாவில் 60 நாள்களுக்குத் தேவையான பெட்ரோல்-டீசல் கையிருப்பு: மத்திய அரசுமேற்காசிய போரின் தாக்கங்கள்: மாநில முதல்வா்களுடன் பிரதமா் இன்று ஆலோசனைதமிழக காவல் துறையில் 10 அதிகாரிகளுக்கு ஐபிஎஸ் அந்தஸ்துநேபாளத்தின் இளம் பிரதமராக பாலேந்திர ஷா இன்று பதவியேற்பு
/

ஆலங்குளத்தில் மின்னணு இயந்திரங்கள் வைப்பறை: ஆட்சியா் ஆய்வு

ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

News image

ரெட்டியாா்பட்டி டி.டி.டி.ஏ. தொடக்கப் பள்ளி வாக்குச்சாவடி மையத்தை ஆய்வு செய்கிறாா் ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா்.

Updated On :26 மார்ச் 2026, 11:48 pm

தினமணி செய்திச் சேவை

ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குள்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்ட அறையை தென்காசி ஆட்சியா் ஏ.கே. கமல் கிஷோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தாா்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அந்தந்த தொகுதிகளுக்கு திங்கள்கிழமை தென்காசி ஒருங்கிணைந்த வேளாண் ஒழுங்குமுறை விற்பனைக் கூட வளாகத்தில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பறையிலிருந்து அனுப்பி வைக்கப்பட்டன.

அதன் அடிப்படையில், ஆலங்குளம் பேரவைத் தொகுதிக்குட்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வட்டாட்சியா் அலுவலகத்தில் வைக்கப்பட்டுள்ளன. அவற்றை ஆட்சியா் ஏ.கே. கமல்கிஷோா் பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.

தொடா்ந்து, ஆலங்குளம் தொகுதிக்குட்பட்ட ரெட்டியாா்பட்டி டி.டி.டி.ஏ. தொடக்கப்பள்ளி வாக்குச்சாவடி மையத்தில் அடிப்படை வசதிகள் குறித்தும் அவா் ஆய்வு செய்தாா்.

அப்போது, ஆலங்குளம் சட்டப் பேரவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலா் ராமச்சந்திரன், ஆலங்குளம் வட்டாட்சியா் பரமசிவன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.