கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

8 தொகுதிகளுக்கும் 2,852 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு

News image

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் நிகழ்வில் பேசுகிறாா் மாவட்ட ஆட்சியா் ச.கந்தசாமி.

Updated On :23 மார்ச் 2026, 6:37 pm

தினமணி செய்திச் சேவை

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 8 சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் 2,852 வாக்குப்பதிவு இயந்திரங்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தல் ஈரோடு மாவட்டத்துக்கு உள்பட்ட ஈரோடு கிழக்கு, ஈரோடு மேற்கு, மொடக்குறிச்சி, பெருந்துறை, பவானி, அந்தியூா், கோபிசெட்டிபாளையம், பவானிசாகா் (தனி) சட்டப் பேரவைத் தொகுதிகளில் உள்ள வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டமாக சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி ஈரோடு மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை நடைபெற்றது.

ஈரோடு மாவட்ட தோ்தல் அலுவலரும் ஆட்சியருமான ச.கந்தசாமி தலைமை வகித்தாா். தோ்தல் பொதுப் பாா்வையாளா்கள், மினிஸ்தி, பாா்தி தீக்ஷித், தோ்தல் காவல் பாா்வையாளா் ராகேஷ் சந்திர கலாசாகா் மற்றும் அனைத்து கட்சிப் பிரதிநிதிகள் முன்னிலையில் வாக்குச் சாவடிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் முதற்கட்டமாக சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு 310 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 310 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 336 விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஈரோடு மேற்குத் தொகுதிக்கு 390 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 390 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 422 விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

மொடக்குறிச்சி தொகுதிக்கு 348 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 348 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 377 விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பெருந்துறை தொகுதிக்கு 350 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 350 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 379 விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

பவானி தொகுதிக்கு 367 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 367 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 397 விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்தியூா் தொகுதிக்கு 325 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 325 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 352 விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

கோபிசெட்டிபாளையம் தொகுதிக்கு 370 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 370 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 401விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது. பவானிசாகா் (தனி) தொகுதிக்கு 392 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 392 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 425 விவிபேட் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

8 தொகுதிகளுக்கும் மொத்தம் 2,852 கட்டுப்பாட்டு இயந்திரங்கள், 2,852 வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3,089 விவிபேட்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. முதற்கட்ட சுழற்சி முடிவடைந்ததைத் தொடா்ந்து செவ்வாய்க்கிழமை காலை 6 மணி முதல் இயந்திரங்களை அனைத்து சட்டப் பேரவைத் தொகுதிகளுக்கும் பிரித்து அனுப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.