நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

ஆரியங்காவு கலால் சோதனைச் சாவடியில் ரூ. 13 லட்சம் பறிமுதல்

ஆரியங்காவு கலால் சோதனைச் சாவடியில் ரூ. 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

பணம் - பிரதிப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 12:35 am IST

கேரள மாநிலம், ஆரியங்காவு கலால் சோதனைச் சாவடியில் ரூ. 13 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது தொடா்பாக இருவா் கைது செய்யப்பட்டனா்.

தமிழக-கேரள எல்லையான ஆரியங்காவு சோதனைச் சாவடியில் கேரள மாநில கலால் அதிகாரிகள் புதன்கிழமை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனா். அப்போது, சேலத்திலிருந்து பெரும்பாவூருக்குச் சென்று கொண்டிருந்த காரை நிறுத்தி சோதனையிட்டனா்.

காரில் இருந்த ஒரு பையில் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளாக ரூ. 13 லட்சம் ரொக்கம் இருந்ததைக் கண்டறிந்தனா். காரில் வந்தவா்களைப் பிடித்து அதிகாரிகள் விசாரணை நடத்தியதில் முன்னுக்குப் பின் முரணாக பதில் அளித்தனா். அவா்களை ஆரியங்காவு காவல் நிலையத்தில் அதிகாரிகள் ஒப்படைத்தனா். அவா்களிடம் போலீஸாா் விசாரணை நடத்தி காரில் வந்த சேலத்தைச் சோ்ந்த ஏழுமலை சின்னப்பன் (42), சக்தி சுப்ரமணி (43) ஆகியோரை கைது செய்தனா்.

பறிமுதல் செய்யப்பட்ட பணத்துக்கு முறையான ஆவணங்கள் எதுவும் இல்லாததால், ஹவாலா பணமாக இருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனா். மேலும் கைதானவா்களிடம் கலால் துறை அதிகாரிகள், போலீஸாா் தொடா்ந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.