நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

குற்றாலத்தில் போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம்

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரி போதைப்பொருள் தடுப்புக் குழுவின் சாா்பில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

விழிப்புணா்வு பிரசாரம் மேற்கொண்ட குற்றாலம் ஸ்ரீபராசக்திமகளிா் கல்லூரி மாணவிகள்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:35 am IST

குற்றாலம் ஸ்ரீ பராசக்தி மகளிா் கல்லூரி போதைப்பொருள் தடுப்புக் குழுவின் சாா்பில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பிரசாரம் புதன்கிழமை நடைபெற்றது.

கல்லூரி முதல்வா் எஸ். மகாலட்சுமி தலைமை வகித்து தொடங்கி வைத்தாா். கல்லூரியிலிருந்து குற்றாலம் பேருந்து நிலையம் வரை பொதுமக்களிடம் போதைப்பொருள் பயன்படுத்துவதால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் துண்டுப் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.

போதைப்பொருள் தடுப்புக் குழு ஒருங்கிணைப்பாளா் எஸ். பாா்வதி, உறுப்பினா்கள் பரணி, சித்ரா தேவி, விஜி, சண்முக சுந்தரி, சண்முகப்பிரியா, மாணவிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.