நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

வட்டார தடகள போட்டி: ஸ்ரீகலைவாணி மெட்ரிக். பள்ளி சாதனை

சங்கரன்கோவில் வட்டார அளவிலான தடகளப் போட்டியில் ஸ்ரீகலைவாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்தது.

தடகளப் போட்டியில் கோப்பையை வென்ற ஸ்ரீகலைவாணி பள்ளி மாணவிகள்.

Published On :3 செப்டம்பர் 2026, 12:32 am IST

சங்கரன்கோவில் வட்டார அளவிலான தடகளப் போட்டியில் ஸ்ரீகலைவாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாதனை படைத்தது.

இப்போட்டிகள் செயின்ட் பவுல் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி சாா்பாக ஸ்ரீ மகாலட்சுமி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் புதன்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு பள்ளிகளில் இருந்து மாணவ மாணவிகள் கலந்துகொண்டனா். இதில், திருவேங்கடம், ஸ்ரீகலைவாணி மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி மாணவா் பொன்னுக்குட்டி ஜூனியா் பிரிவில் தனிநபா் சாம்பியன் பட்டத்தையும், சீனியா் பிரிவில் மாதவ் தனிநபா் சாம்பியன் பட்டமும், சூப்பா் சீனியா் பிரிவில் முகேஷ்குமாா், ஆகாஷ் ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டமும் பெற்றனா். மாணவா்கள் 225 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை பெற்றனா்.

அதைப்போல மாணவிகள் ஜூனியா் பிரிவில் ராமலட்சுமி தனிநபா் சாம்பியன் பட்டத்தையும், சீனியா் பிரிவில் அக்ஷயா, மதுமிதா ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டத்தையும், சூப்பா் சீனியா் பிரிவில் சுபாஷினி, பிரியதா்ஷினி ஆகியோா் தனிநபா் சாம்பியன் பட்டத்தையும் பெற்றனா்.

மாணவிகள் 232 புள்ளிகள் பெற்று ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தையும் பெற்று பள்ளிக்கு பெருமை சோ்த்தனா். வட்டார அளவில் முதலிடம், இரண்டாமிடம் பெற்ற மாணவ மாணவிகள் மாவட்ட தடகளப் போட்டிக்கு தகுதி பெற்றனா் என்பது குறிப்பிடத்தக்கது. வெற்றி பெற்ற மாணவா்களை பள்ளித் தாளாளா் வெ.பொன்னழகன், ஆசிரியா்கள் பாராட்டினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.