மின்னல் பாய்ந்து தொழிலாளி காயம்

முன்னீர்பள்ளம் அருகே புதன்கிழமை மின்னல் பாய்ந்து தொழிலாளி பலத்த காயமடைந்தார்.
Updated on
1 min read

முன்னீர்பள்ளம் அருகே புதன்கிழமை மின்னல் பாய்ந்து தொழிலாளி பலத்த காயமடைந்தார்.
முன்னீர்பள்ளம் அருகேயுள்ள தருவை பெருமாள்கோயில் தெருவைச் சேர்ந்த செல்லையா மகன் ஈஸ்வரன் (40). கூலித்தொழிலாளியான இவர், அதே பகுதியில் புதன்கிழமை நின்று கொண்டிருந்தாராம். அப்போது இடியுடன் பலத்த மழை பெய்தபோது திடீரென மின்னல் பாய்ந்ததில் ஈஸ்வரன் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதுகுறித்து முன்னீர்பள்ளம் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.
தீக்காயமடைந்த பெண் சாவு: மானூர் அருகேயுள்ள வெங்கலப்பட்டியைச் சேர்ந்த முத்துப்பாண்டி மனைவி கலையரசி (30). இவர், கடந்த சில நாள்களுக்கு முன்பு நிகழ்ந்த தீ விபத்தில் காயமடைந்தார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் புதன்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து மானூர் போலீஸார் விசாரித்து வருகிறார்கள்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com