15 வட்டங்களில் இன்று அம்மா திட்ட முகாம்

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (அக்.13) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
Updated on
1 min read

திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களில் வெள்ளிக்கிழமை (அக்.13) அம்மா திட்ட முகாம் நடைபெறுகிறது.
இதுதொடர்பாக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
திருநெல்வேலி மாவட்டத்தில் உள்ள 15 வட்டங்களிலும் தலா ஒரு கிராமம் வீதம் தேர்வு செய்யப்பட்டு வாரந்தோறும் அம்மா திட்ட முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஏற்கெனவே மூன்று கட்ட முகாம்கள் நடந்துள்ளன. 4ஆவது கட்ட முகாம்கள் தொடர்ந்து வாரந்தோறும் நடைபெறுகின்றன.
இதன்படி, திருநெல்வேலி வட்டத்தில் துலுக்கர்குலம், ராதாபுரம் வட்டத்தில் சமூகரெங்கபுரம், அம்பாசமுத்திரம் வட்டத்தில் கீழ்முகம், நான்குனேரி வட்டத்தில் விஜயநாராயணம், சேரன்மகாதேவி வட்டத்தில் ஓமநல்லூர், பிரான்சேரி, பாளையங்கோட்டையில் பற்பகுளம், மானூர் வட்டத்தில் செழியநல்லூர் ஆகிய கிராமங்களில் முகாம் நடைபெறுகிறது.
சங்கரன்கோவிலில் தடியம்பட்டி, திருவேங்கடத்தில் உசிலங்குளம், வி.கே.புதூர் வட்டத்தில் வாடி, ஆலங்குளம் வட்டத்தில் குத்தப்பஞ்சான், கடையநல்லூர் வட்டத்தில் அச்சன்புதூர் ஆகிய கிராமங்களில் வெள்ளிக்கிழமை முகாம் நடைபெறும்.
இந்த முகாம்களில், அந்தந்தப் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் கலந்து கொண்டு இலவச வீட்டுமனைப் பட்டா, முதியோர் உதவித்தொகை உள்பட சமூக பாதுகாப்புத் திட்டங்கள், பட்டா மாறுதல்கள், உழவர் பாதுகாப்பு அட்டைகள், பிறப்பு, இறப்பு சான்றிதழ்கள், இருப்பிடச் சான்றிதழ்கள், குடும்ப அட்டை, சாலை மற்றும் குடிநீர் வசதி குறித்து கோரிக்கை மனுக்கள் அளிக்கலாம். தகுதியான மனுக்களுக்கு முகாம் இடத்திலேயே தீர்வு காணப்படும் என்றார் ஆட்சியர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com