அரசுப் பள்ளிகளில் 11,773 பயிற்றுநர்களுக்கு மாத தொகுப்பூதியம் ரூ. 2,500 உயர்வு - அரசாணை வெளியீடுமேற்காசியா, வளைகுடாவில் போர்ச் சூழல் - இந்தியாவின் முட்டை ஏற்றுமதி முடக்கம்தமிழ்நாடு காங். கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகையின் மகள் நிச்சயதார்த்த விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்புவேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் வழித்தடத்தில் மார்ச் 5 சோதனை ஓட்டம்திருமலையில் சந்திர கிரகணத்துக்குப்பின் மீண்டும் நடை திறப்பு: பக்தர்களுக்கு அனுமதி!மாநிலங்களவைத் தேர்தலில் தேமுதிகவுக்கு 1 இடம் ஒதுக்கீடு: திமுகவுடன் சுமூக உடன்பாடுமாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பாஜக தலைவர் நிதின் நவீன் போட்டி! இந்தியாவில் 25 நாள்களுக்கான கச்சா எண்ணெய், பெட்ரோல், டீசல் இருப்பு!மேற்கு ஆசிய பதற்றம்: கடந்த 48 மணிநேரத்தில் 8 நாடுகளின் தலைவர்களுடன் பிரதமா் மோடி ஆலோசனை!ஈரானில் நடான்ஸ் அணுசக்தி மையம் மீதும் தாக்குதல் - உறுதிசெய்த ஐஏஇஏஈரான் எந்தவொரு அணு ஆயுத தயாரிப்பிலும் ஈடுபடவில்லை - ரஷியா திட்டவட்டம்!பாகிஸ்தானுடன் தீவிர சண்டை - ஆப்கானிஸ்தானில் 42 பேர் பலி!நான்குநேரி கொலைச் சம்பவம்: 5 தனிப்படைகள் அமைத்து விசாரணை!ஈரானை உலுக்கிய நிலநடுக்கம்! மேலும் அதிகரிக்கும் பதற்றம்!அமெரிக்கா - இஸ்ரேல் தாக்குதலில் ஈரானில் 787 பேர் கொலை!
/

ஆலங்குளம் அருகே பெண் கொலையில் மனைவி கைது; கணவர் சரண்

ஆலங்குளம் அருகே பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர்

News image
Updated On :20 அக்டோபர் 2017, 11:56 pm

DIN

ஆலங்குளம் அருகே பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பெண் ஒருவரை போலீஸார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட பெண்ணின் கணவர் திருநெல்வேலி நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
ஆலங்குளம் அருகேயுள்ள சீதபற்பநல்லூர் போலீஸ் சரகம் வல்லவன்கோட்டை தெற்குத் தெருவைச் சேர்ந்த பெருமாள் மனைவி குழந்தை திரவியத்தம்மாள்(40).  கணவனை இழந்த இவர் தேசிய ஊரக வேலை வாய்ப்புத் திட்டத்தில் கணக்கராக பணிபுரிந்து வந்தார். இவர், அதே பகுதி நடுத்தெருவில் வசிக்கும் காசி மகன் சுப்பிரமணியனுக்கு (37) அவ்வப்போது பணம் கொடுத்து வந்தாராம். இந்நிலையில் அவர் சுப்பிரமணியனிடம் பணத்தை திருப்பித் தருமாறு கேட்டு வந்தாராம்.
இதனால் சுப்பிரமணியனின் மனைவி சுப்புலட்சுமி(35)-க்கும் குழந்தை திரவியத்தமாளுக்குமிடையே அடிக்கடி தகராறு ஏற்படுமாம்.இந்நிலையில் வியாழக்கிழமை, சுப்பிரமணியன் வீட்டுக்குச் சென்று குழந்தை திரவியத்தம்மாள் பணத்தைக் கேட்ட போது அவரை சுப்பிரமணியன் இரும்பு கம்பியால் தாக்கியதில் பலத்த காயமடைந்தார். அவரை மீட்டு திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்த நிலையில் அங்கு அவர் உயிரிழந்தார்.
இதுகுறித்து வழக்குப் பதிந்த சீதபற்பநல்லூர் போலீஸார்  சுப்பிரமணியன் மனைவி சுப்புலட்சுமியை வெள்ளிக்கிழமை கைது செய்தனர். தலைமறைவாக இருந்த சுப்பிரமணியன் திருநெல்வேலி குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.