தருவை எப்.எக்ஸ். பாலிடெக்னிக் கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
இக்கல்லூரியில் நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் டிவிஎஸ், அவலான், மைக்ரோ சிஸ்டம், சோகோ, நோக்கியா உள்ளிட்ட 21 தனியார் நிறுவனங்களில் பணி செய்ய 221 மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டனர். இதையடுத்து நடைபெற்ற பணி நியமன ஆணை வழங்கும் நிகழ்ச்சிக்கு ஸ்காட் கல்விக் குழும பொதுமேலாளர் இக்னேஷியஸ் சேவியர் தலைமை வகித்தார். கல்லூரி முதன்மை தொழில்நுட்ப அலுவலர் குப்புசாமி முன்னிலை வகித்தார்.
நிகழ்ச்சியில், தேர்வு செய்யப்பட்ட மாணவர்களுக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது. இதில் முதல்வர் அண்டனி வசந்தகுமார், துணை முதல்வர் ராஜ், நிர்வாக அதிகாரி எம். மைக்கேல் பொன்ராஜ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். வேலைவாய்ப்பு அதிகாரி கோபி பிரபு நன்றி கூறினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.









