கேரளத்தில் ஷிகெல்லா பாக்டீரியாவுக்கு சிறுவன் உயிரிழப்புலெபனான் ஆக்கிரமிப்பில் இருந்து பின்வாங்க மாட்டோம்: இஸ்ரேல்உக்ரைனில் ரஷியா பயங்கர வான்வழித் தாக்குதல்நீட் மறுதோ்வு வினாத்தாள் விற்பனை செய்வதாக விளம்பரம்: ராஜஸ்தானை சோ்ந்த இருவா் கைதுதிருப்பதி - புதுச்சேரி ‘மெமு’ ரயில் 24, 27-இல் விழுப்புரத்துடன் நிறுத்தம்
/

திசையன்விளை அருகே விபத்தில் காயமடைந்தவர் சாவு

திசையன்விளை அருகே நிகழந்த விபத்தில் காயமடைந்து, மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் புதன்கிழமை  உயிரிழந்தார்.

Updated On :5 ஏப்ரல் 2018, 8:43 am IST

திசையன்விளை அருகே நிகழந்த விபத்தில் காயமடைந்து, மருத்துமனையில் சிகிச்சை பெற்று வந்தவர் புதன்கிழமை  உயிரிழந்தார்.
நான்குனேரி அருகே உள்ள பட்டர்புரத்தை சேர்ந்த 17 பேர் திசையன்விளை அருகில் உள்ள தச்சன்விளை கிராமத்தில் உள்ள குலதெய்வம் கோயிலுக்கு சென்றுவிட்டு சனிக்கிழமை அதிகாலை வேனில் ஊர் திரும்பினர்.   திசையன்விளையை அடுத்த வாழைத்தோட்டம் கிராமம் அருகே  எதிரே வந்த கார் வேனுடன் நேருக்கு நேர் மோதி வேன் கவிழ்ந்தது.  இதில் வேனில் பயணம் செய்த திருமலை நம்பி (62), அவரது மனைவி சுந்தரம் அம்மாள் (54),  மகள் யசோதா (30) பேரன் கிருஷ்னன் (9) ஆகியோரும் காரில் பயணம் செய்த ராஜேஷ் (35), வசந்தராஜன் (30), குழந்தை ஏசு (25)  ஆகியோரும் பலத்த காயம டைந்தனர்.  காயம டைந்த அனைவரும் திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில்  அனுமதிக்கப்பட்டனர். இவர்களில்  திருமலை நம்பி அங்கு புதன்கிழமை   உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.