திருக்குறுங்குடி அருள்மிகு அழகியநம்பிராயர் கோயிலில் பங்குனித் தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.9) நடைபெறுகிறது.
வைணவத் தலங்கள் 108 இல் பிரசித்தி பெற்ற இக்கோயிலில் பங்குனித் திருவிழா மார்ச் 31ஆம் தேதி தொடங்கியது. இதையொட்டி, அழகியநம்பிராயர் நாள்தோறும் பல்வேறு வாகனங்களில் வீதியுலா வரும் நிகழ்வு நடைபெறுகிறது. 6ஆம் திருநாளான வியாழக்கிழமை அதிகாலை மேலரத வீதியில் தேவகந்தர்வ மகரிஷிகளுக்கு ஐந்து நிலைகளிலான நம்பி சுவாமி திருக்காட்சி அருளினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பங்குனித் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் திங்கள்கிழமை (ஏப்.9) காலை 9.30 மணிக்கு நடைபெறுகிறது. தேரோட்டத்தை ராமானுஜ ஜீயர் சுவாமிகள் வடம் பிடித்து தொடங்கிவைக்கிறார். தேரோட்டத்தையொட்டி சிறப்பு அன்னதானம் நடைபெறுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அம்மா அம்மாதான்! நூறு சாமி பாடல் புரோமோ!

அற்புதத்திற்கு குறைவில்லாத ஒன்று... மாளவிகா மோகனன் பகிர்ந்த பதிவு!

தொடர் விடுமுறையைக் கொண்டாட இத்தனை படங்களா? இந்த வார ஓடிடி வெளியீடு!

நாகர் மொழியில் நீட் தேர்வா? தமிழில் எழுத விண்ணப்பித்தவருக்கு நேரிட்டுள்ள சோதனை!
வீடியோக்கள்
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு

த்ரிஷ்யம் 3 டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

எல்லா டீமும் ஏன் தப்பு தப்பா விளையாடுறாங்க..?
தினமணி செய்திச் சேவை

பில்லா ரீ-ரிலீஸ் டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

