சென்னை மாநகர காவல் ஆணையராக அபின் தினேஷ் மோதக் பொறுப்பேற்பு!சென்னை மாநகர காவல் ஆணையர் அருண் மாற்றம்! சென்னையில் வாக்காளர் தகவல் சீட்டு வழங்கும் பணி! ஏப்.12ஆம் தேதி முதல்!சென்னையில் ஐபிஎல்: மெட்ரோ ரயிலில் இலவசமாக பயணிக்கலாம்!பச்சைத் துண்டுப் போட்டு பச்சை துரோகம் செய்தவர் பழனிசாமி: முதல்வர் ஸ்டாலின்அஸ்ஸாம் தேர்தல்! ஏப்.11-ல் மறு வாக்குப் பதிவு!மதுரா: யமுனையில் சுற்றுலாப் படகு கவிழ்ந்ததில் 10 பேர் பலி பொறியியல் கல்வியில் இரண்டு படிப்புகளுக்குக் கூடுதல் மவுசு! ஏன்?தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் தலைவர் விலகல்!
/

பாளை.யில் நூல் வெளியீடு

பாளையங்கோட்டையில் உள்ள மாநில தமிழ்ச் சங்கத்தில் "திருக்குறளும் திரைப்படமும்' என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :9 ஏப்ரல் 2018, 1:37 am

பாளையங்கோட்டையில் உள்ள மாநில தமிழ்ச் சங்கத்தில் "திருக்குறளும் திரைப்படமும்' என்ற நூல் வெளியீட்டு விழா ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு உலகத் திருக்குறள் தகவல் மையத் தலைவர் பேராசிரியர் பா.வளன்அரசு தலைமை வகித்தார். முனைவர் செ.பிரமசக்தி இறைவாழ்த்துப் பாடினார். தனித்தமிழ் இலக்கியக் கழகச் செயலர் க.ஞா.சாண்பீற்றர் வரவேற்றார். அருணா சிவாஜி நூலை வெளியிட, திருக்குறள் பி.சுந்தரம் முதல் பிரதியைப் பெற்றுக் கொண்டார். "திருக்குறளில் நன்றியறிதல்' என்ற தலைப்பில் கம்பன் கழகச் செயலர் பொன்.வேலுமயில் பேசினார். நூலாசிரியர் விவேகானந்த பாசுகர் ஏற்புரையாற்றினார். பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி, சொ.முத்துசாமி, நா.உசாதேவி, வி.பாப்பையா, ராசகோபால் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.