அடுத்த 2 மணி நேரம் 20 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!ஜூன் 1ம் தேதி முதல் திருத்தப்பட்ட அட்டவணைப்படி புறநகர் மின்சார ரயில்கள் இயங்கும்குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்பயிர்க்கடன் தள்ளுபடி விவகாரம்: குறைகள் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்படும் - அமைச்சர் செங்கோட்டையன்வைகாசி விசாகம்: திருப்பரங்குன்றம் கோயிலில் பக்தர்கள் சிலர் மயக்கம்!டெட் தேர்வில் தேர்ச்சி பெறுவதற்கு கால அவகாசம் நீட்டிப்பு!பஞ்சாப் உள்ளாட்சித் தேர்தல்: வாக்காளர்களுக்கு கேஜரிவால் நன்றி!தமிழகத்தில் 5 நாள்களுக்குள் பருவமழை தொடங்கும்!27 ஆண்டுகளுக்குப் பின் இன்று இரவு நிகழும் 'புளூ மைக்ரோ மூன்'ஜூன் 1 திருச்சி கிழக்கு தொகுதி மக்களைச் சந்திக்கிறார் முதல்வர் விஜய்! தவெக குதிரை பேரம்: ஆளுநருடன் அதிமுக நிர்வாகிகள் சந்திப்பு!நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி காலமானார்
/

தியாகராஜநகர் நூலகத்தில் வாசகர் வட்டக் கூட்டம்

தியாகராஜநகர் கிளை நூலக வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :18 ஏப்ரல் 2018, 7:58 am IST

தியாகராஜநகர் கிளை நூலக வாசகர் வட்டக் கூட்டம் நடைபெற்றது.
வாசகர் வட்டத் தலைவர் கவிஞர் பொன்.வேலுமயில் தலைமை வகித்தார். முன்னாள் மாமன்ற உறுப்பினர் பி.தியாகராஜன்,  தியாகராஜநகர் விக்ன விநாயகர் அறநெறிச் சங்கத் தலைவர் வே.வீரபத்தின் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வாசகர் வட்ட இணைச் செயலர் இல.செந்தூர்நாதன் வரவேற்றார்.
செந்தமிழே செம்மொழியே என்ற தலைப்பில் 7ஆம் வகுப்பு மாணவி ஸ்ரீகலா, எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான நற்றிணையில் பண்டை தமிழர்களின் நாகரிகப் பண்புகள் என்ற தலைப்பில் கவிஞர் பொன்.வேலுமயில்,  புண்ணியம் எனும் உயிர் என்ற தலைப்பில் நெல்லை கம்பன் கழகத் தலைவர் பேராசிரியர் சிவ.சத்தியமூர்த்தி ஆகியோர் சொற்பொழிவாற்றினர். 
இரா.நடராஜன்,  முத்துசாமி,  பூவலிங்கம்,  பி.மாணிக்கம், ஆர்.போத்திராஜ், எஸ்.மாரியப்பன்,  டி.குருசாமி,  என்.அனந்தராமகிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர். வாசகர் வட்டச் செயலரும், நூலகருமான இரா.சிவஞானசுந்தரி நன்றி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.