பதவி உயர்வு அளிப்பதில் நிகழ்ந்துள்ள விதி மீறலை கண்டித்து திருநெல்வேலியில் ஜாக்டோ அமைப்பு சார்பில் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
முதன்மை கல்வி அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர்கள் சங்க மாவட்டத் தலைவர் சேதுராஜ் தலைமை வகித்தார். தமிழ்நாடு ஆரம்பப் பள்ளி ஆசிரியர் கூட்டணி மாவட்டச் செயலர் செ. பால்ராஜ் ஆர்ப்பாட்டத்தை தொடங்கிவைத்தார்.
திருநெல்வேலி மாவட்டத்தில் பதவி உயர்வு அளிப்பதில் நிகழ்ந்துள்ள விதி மீறலை கண்டித்தும், தலைமையாசிரியர்களுக்கு வழங்கப்படும் மாவட்ட கல்வி அலுவலர், மாவட்டத் தொடக்கக் கல்வி அலுவலர் ஆகிய பிற பொறுப்பு நியமனங்களின்போது, உரிய பணி மூப்பு தகுதியுடையோர் பட்டியலில் உள்ளவாறு பணி நியமனம் செய்ய வலியுறுத்தியும் இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதில், மூட்டா அமைப்பின் பொதுச்செயலர் நாகராஜன், தமிழ்நாடு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர் கழக மாநிலச் செயலர் பிச்சைக்கனி, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமையாசிரியர் கழக மாநிலப் பொருளாளர் கணேசன், தமிழ்நாடு முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் கழக மாநில பொதுச் செயலர் மனோகரன், மாவட்டச் செயலர் ஆசீர் சார்லஸ்நீல் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மின்னல் தாக்கி உயிரிழந்த தம்பதி குடும்பத்தினருக்கு நிவாரண நிதி வழங்கல்! அமைச்சா் செங்கோட்டையன் ஆறுதல்
சிறுமியிடம் அநாகரீகமாக பேசிய தொழிலாளி போக்ஸோவில் கைது

விடுதியில் தங்கியிருந்த தொழிலாளி உயிரிழப்பு
புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


