கீழப்பாவூர்  நரசிம்மர் கோயிலில்  பிப். 7இல் சுவாதி பூஜை

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் புதன்கிழமை (பிப்.7) சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெறுகிறது
Updated on
1 min read

கீழப்பாவூர் நரசிம்மர் கோயிலில் புதன்கிழமை (பிப்.7) சுவாதி நட்சத்திர சிறப்பு பூஜை நடைபெறுகிறது
 தெட்சிண அகோபிலம் என்று அழைக்கப்படும் பழைமை வாய்ந்த இந்தத் திருக்கோயிலில்  மாதந்தோறும் நரசிம்மர் அவதரித்த சுவாதி நட்சத்திரத்தில் சிறப்பு பூஜை நடைபெறும்.  அதன்படி, நிகழ்மாதம் புதன்கிழமை (பிப்.7) சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு மாலை 3 மணி அளவில் 16 வகையான மூலிகைகளால் மூலமந்திர ஹோமம், விஷ்ணு சூத்த ஹோமம், மன்யு சூத்த ஹோமம், பாக்ய சூத்த ஹோமம்,  மகாலட்சுமி ஹோமம் ஆகியன  நடைபெறும். தொடர்ந்து சிறப்பு  அபிசேகங்கள் நடைபெறும்.  மாலை 5.30 மணிக்கு பெருமாள் சப்பரத்தில் தீர்த்தவலம், தீபாராதனை ஆகியன நடைபெறுகின்றன.   ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறையினரும், நரசிம்ம சுவாமி கைங்கர்ய சபையினரும் செய்து வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com