எம்.பி. பதவியை ராஜிநாமா செய்தார் திரிணமூல் மூத்த தலைவர்! கட்சியிலிருந்தும் விலகல்!தில்லியில் இந்தியா கூட்டணி கூட்டம் தொடங்கியது! விசிக, மதிமுக பங்கேற்பு! யூடியூபர் மாரிதாஸ் மதுரையில் கைது மானவ் சுதர் அசத்தல்! முதல் இன்னிங்ஸில் 152 ரன்களுக்கு சுருண்டது ஆப்கானிஸ்தான்! மின்வாரிய ஹார்டு டிஸ்க் திருட்டு வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்!முதல்வர் விஜய்யுடன் செஸ் வீரர் பிரக்ஞானந்தா சந்திப்பு
/

மேலப்பாளையத்தில் ரஜினி மக்கள் மன்றக் கூட்டம்

ரஜினி மக்கள் மன்றத்தின் மேலப்பாளையம் மண்டல ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :23 ஜூலை 2018, 8:04 am IST

ரஜினி மக்கள் மன்றத்தின் மேலப்பாளையம் மண்டல ஆலோசனைக் கூட்டம் மற்றும் உறுப்பினர் சேர்க்கை முகாம் ஆகியவை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
கூட்டத்திற்கு மாவட்டச் செயலர் செல்வக்குமார் தலைமை வகித்தார். கெளரவத் தலைவர் பானுசேகர், துணைச் செயலர் பாலகிருஷ்ணன், மகளிரணிச் செயலர் சியாமளா ஆகியோர் முன்னிலை வகித்தனர். மேலப்பாளையம் மண்டலச் செயலர் எஸ்.கே.அல்கபீர் சம்சுதீன் வரவேற்றார். மேலப்பாளையம் மண்டலத்தில் ரஜினி மக்கள் மன்றத்தின் கீழ் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்களைச் சேர்ப்பது; அனைத்து வார்டுகளிலும் பூத் கமிட்டிகளை அமைப்பது; மக்கள் பிரச்னைகளுக்காக அதிகாரிகளிடம் மனு அளிப்பது; நிறைவேற்றப்படாத கோரிக்கைகளுக்காக மக்களைத் திரட்டி குரல் கொடுப்பது  உள்ளிட்ட தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. மேலப்பாளையம் மண்டல நிர்வாகிகள் அபுபக்கர்சித்திக், ஜெபஸ்டின்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.