சங்கர்நகரில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.
இந்தியா சிமென்ட்ஸ் நிறுவனம், சங்கர் மேல்நிலைப் பள்ளி ஆகியவை சார்பில் நடைபெற்ற இப் பேரணிக்கு ஆலையின் துணைத் தலைவர் எஸ்.தட்சிணாமூர்த்தி தலைமை வகித்தார். பள்ளிச் செயலர் மற்றும் ஆலை உதவி பொது மேலாளர் (மனிதவளம்) இரா.ஏகாம்பரம், ஆலை மருத்துவ அலுவலர் சேகர், உதவி தலைமையாசிரியர் ஆ.ரெங்கநாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் பா.உதயகுமார் பேரணியைத் தொடங்கி வைத்தார். பள்ளி வளாகத்தில் இருந்து புறப்பட்ட பேரணி பேருந்து நிறுத்தம், தாழையூத்து பஜார் வழியாக பள்ளியை அடைந்தது. பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தியும், முழக்கங்கள் எழுப்பியும் மாணவர்கள் பேரணியில் பங்கேற்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் வாகன காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்

ரூ.950 கோடி சம்பளம் வாங்கிய ஹாலிவுட் நடிகர்..! மார்வெல் திரைப்படங்களிலே அதிகம்!

மும்பையில் பல கோடி மதிப்பில் வீடு கட்டிய பூஜா ஹெக்டே!

ஒரே இடத்தில் இவ்வளவு அசிங்கத்தைப் பார்த்ததில்லை: மாணவர்களை விமர்சித்த கங்கனா!
விடியோக்கள்

தமிழ்த்தாய் வாழ்த்து அவமதிப்பா? அமைச்சர் நிர்மல் குமார் பதில்


