எண்ணெய்க் கப்பல்களுக்குப் பாதுகாப்பு அளிக்க நாங்கள் தயார்நிலையில் இல்லை! - அமெரிக்கா!அமெரிக்கா மீதான தாக்குதல் தொடரும்! மொஜ்தபா கமேனி முதல் உரையில் எச்சரிக்கை!ஈரான் போர்: சொந்த நாட்டினுள் இடம்பெயர்ந்த 32 லட்சம் மக்கள்!பங்குச்சந்தை: ஆட்டோ பங்குகள் கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 829, நிஃப்டி 228 புள்ளிகள் சரிவு!ஓபிசி பிரிவினருக்கான கிரீமி லேயர் தகுதி: உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு முதல்வர் ஸ்டாலின் ஆதரவு!சட்டம்-ஒழுங்கு சீர்கேடு: திமுக அரசைக் கண்டித்து தே.ஜ.கூ. ஆர்ப்பாட்டம்!தமிழ்நாட்டில் கடந்த 5 ஆண்டில் கொலை, பாலியல் குற்றங்கள் குறைந்துள்ளன: உள்துறை செயலர்வளைகுடா போர்! அமெரிக்க எண்ணெய்க் கப்பல் மீதான தாக்குதலில் இந்தியர் கொலை!
/

"சுயதொழில் தொடங்க முதல் தலைமுறை தொழில்முனைவோர் விண்ணப்பிக்கலாம்'

திருநெல்வேலி மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க முதல் தலைமுறை  தொழில் முனைவோருக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி அழைப்பு விடுத்துள்ளார்.

News image
Updated On :1 மார்ச் 2018, 2:00 am

DIN

திருநெல்வேலி மாவட்டத்தில் சுயதொழில் தொடங்க முதல் தலைமுறை  தொழில் முனைவோருக்கு ஆட்சியர் சந்தீப் நந்தூரி அழைப்பு விடுத்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
முதல் தலைமுறை தொழில்முனைவோர் சுயதொழில் தொடங்குவதற்காக புதிய தொழில்முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS)​  செயல்படுத்தப்பட்டு வருகிறது. 
இத்திட்டத்தில் பயன்பெற குறைந்தபட்சம் இளங்கலை பட்டப்படிப்பு, டிப்ளமோ, ஐ.டி.ஐ. அல்லது அங்கீகரிக்கப்பட்ட பயிற்சி நிறுவனங்கள் மூலம் தொழிற்பயிற்சியில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 21 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும். பொதுப்பிரிவினர் 35 வயதிற்கு மிகாமலும், பெண்கள்,  தாழ்த்தப்பட்டவர்கள், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டவர்கள்,  மிகவும் பிற்படுத்தப்பட்டவர்கள், சிறுபான்மையினர், முன்னாள் ராணுவத்தினர்,  திருநங்கைகள்,  மாற்றுத்திறனாளிகள் ஆகியோர் 45 வயதிற்கு மிகாமலும் இருக்க வேண்டும்.  தமிழகத்தில் கடந்த மூன்றாண்டுகளாக தொடர்ந்து வசிப்பவராக இருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானத்திற்கு உச்ச வரம்பு இல்லை. இத்திட்டத்தில் சேவை மற்றும் உற்பத்தி தொழில்களுக்கு ரூ.5 லட்சம் முதல்  ரூ.1 கோடி வரை கடனுதவி அளிக்கப்படுகிறது. 
தகுதியான நபர்கள் w‌w‌w.‌m‌s‌m‌e‌o‌n‌l‌i‌n‌e.‌t‌n.‌g‌o‌v.‌i‌n/‌n‌e‌e‌d‌s   என்ற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, மாவட்ட ஆட்சியர்  தலைமையிலான தேர்வுக் குழுவினரால் நேர்காணல் நடத்தப்பட்டு வங்கி மூலம் கடன் வழங்க ஒப்புதல் வழங்கப்படுதுடன், ஒரு மாத கால தொழில்முனைவோர் மேம்பாட்டுப் பயிற்சியும் அளிக்கப்படும். பின்னர் திட்ட மதிப்பில் 25 சதவீதம் அல்லது ரூ.25 லட்சம் வரை அரசு மானியம் வழங்கப்படும்.
முறையாக கடனை திருப்பிச் செலுத்தும்பட்சத்தில், பின் முனை வட்டி மானியமாக 3 சதவீதம் வழங்கப்படும். இத்திட்டத்தில் பயன்பெற தகுதியான நபர்கள் மாவட்ட தொழில் மையத்தை அணுகி பயன்பெறலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.