ஐபிஎல் : சென்னை சூப்பர் கிங்ஸ் 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிமதுரை மாநகராட்சியில் ரூ. 200 கோடி ஊழல் செய்ததால் பதவியை ராஜிநாமா செய்தவர்கள் திமுகவினர்: எடப்பாடி பழனிசாமி ஆமை புகுந்த வீடு போல, பாஜக புகுந்த நாடு உருப்படாது: ப. சிதம்பரம்எந்த வடிவிலும் தமிழ்நாட்டிற்குள் பாஜக வர முடியாது! மு.க. ஸ்டாலின்இவிஎம்-ல் வேட்பாளர்களின் பெயர்கள், சின்னங்கள் பொருத்தும் பணி ஏப். 16-ல் தொடக்கம்!நெல் குவிண்டாலுக்கு ரூ. 3,500; கரும்பு டன் ஒன்றுக்கு ரூ. 4,500 வழங்கப்படும்: விஜய் வாக்குறுதி விவசாய தொழிலாளர்களுக்கு ஆண்டுக்கு ரூ.10,000 : விஜய்தவெக பிரசாரத்தில் மயங்கிய சூலூர் வேட்பாளர்! 7 பெண்கள் மயக்கம்!முதல்வர் பதவியை ராஜிநாமா செய்தார் நிதீஷ் குமார்!
/

பேட்டையில் குடிநீர் இணைப்புகள் துண்டிப்பு

திருநெல்வேலி பேட்டையில் சட்ட விரோதமாக மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சியதாக 2 வீடுகளில் குடிநீர் இணைப்புகள் திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டன.

Updated On :14 மே 2018, 10:20 pm

திருநெல்வேலி பேட்டையில் சட்ட விரோதமாக மின்மோட்டார் பொருத்தி தண்ணீரை உறிஞ்சியதாக 2 வீடுகளில் குடிநீர் இணைப்புகள் திங்கள்கிழமை துண்டிக்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகராட்சி அதிகாரிகளுக்கு வந்த புகார்களின் அடிப்படையில், வார்டு வாரியாக குடிநீர் இணைப்புகளை அதிகாரிகள் ஆய்வு செய்து, மின்மோட்டார்கள் பொருத்தி தண்ணீர்உறிஞ்சப்படுவது குறித்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.
இதையொட்டி, திருநெல்வேலி மண்டலம் பேட்டையில் வார்டு 49 எம்.ஜி.பி. தெரு பகுதியில் உதவி செயற்பொறியாளர் டி. சாமுவேல் செல்வராஜ் தலைமையில் அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின்போது 2 வீடுகளில் மின்மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்து வருவது கண்டறியப்பட்டது. இதையடுத்து, அந்த வீடுகளில் இருந்து மின் மோட்டார்கள் பறிமுதல் செய்யப்பட்டு, குடிநீர் இணைப்புகளும் துண்டிக்கப்பட்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.