வெற்றி பெற்றதும் வேறெங்கும் செல்லாதீர்கள்: வேட்பாளர்களுக்கு விஜய் அறிவுறுத்தல்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,600 உயர்வு! வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்ந்தது!பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு!புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!
/

பேட்டை தேவாலயத்தில் 23ஆவது பிரதிஷ்டை பண்டிகை

பேட்டையில் கிறிஸ்து தேவாலயத்தின் 23 ஆவது பிரதிஷ்டை பண்டிகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

Updated On :3 செப்டம்பர் 2018, 2:31 am

பேட்டையில் கிறிஸ்து தேவாலயத்தின் 23 ஆவது பிரதிஷ்டை பண்டிகை ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தப் பண்டிகையை முன்னிட்டு, கடந்த 31 ஆம் தேதி சிறப்பு ஆராதனையில் ஆலங்குளத்தைச் சேர்ந்த பொன்ராஜ் தேவ செய்தி அளித்தார். ஞாயிற்றுக்கிழமை காலையில் நாசரேத்தைச் சேர்ந்த டேனியல் ராஜ் தலைமையில் ஆலய 23 ஆவது பிரதிஷ்டை பண்டிகை நடைபெற்றது. திருவிருந்து ஆராதனையும், விவிலிய தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசளிப்பும், தொடர்ந்து அசனவிருந்தும் நடைபெற்றன. பேட்டை, ரயில்நகர், சுத்தமல்லி, கொண்டாநகரம், பழையபேட்டை சுற்றுவட்டாரப் பகுதிகளைச் சேர்ந்த கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை பேட்டை சேகர குரு தேவபிச்சை ஸ்டீபன் தலைமையில் சபை ஊழியர் வில்சன் டேனியல் உள்ளிட்டோர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.