தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த தினத்தையொட்டி, அதிமுக சார்பில் பல்வேறு இடங்களில் கட்சிக்கொடியேற்றப்பட்டு இனிப்புகள் வழங்கப்பட்டன.
திருநெல்வேலி மாநகர் மாவட்ட அதிமுக சார்பில் பிஷப் சார்ஜென்ட் மனவளர்ச்சி குன்றியோர் பள்ளி மாணவர்-மாணவிகளுக்கு காலை உணவு வழங்கப்பட்டது. மாநகர் மாவட்டச் செயலர் தச்சை என்.கணேசராஜா தலைமை வகித்து உணவு வழங்கினார். மாநிலங்களவை உறுப்பினர் எஸ்.முத்துக்கருப்பன், தென்காசி மக்களவைத் தொகுதி உறுப்பினர் வசந்தி முருகேசன், வழக்குரைஞர் ஜெனி, பகுதிச்செயலர் கிருஷ்ணமூர்த்தி, மாதவன் உள்பட பலர் கலந்துகொண்டனர். தொடர்ந்து கொக்கிரகுளத்தில் உள்ள எம்.ஜி.ஆர். சிலை அருகே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப்படத்துக்கு, தச்சை என்.கணேசராஜா தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. திருநெல்வேலி மாநகராட்சி 48 ஆவது வார்டில் 1000 பேருக்கு உணவு வழங்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்ட இடங்களில் கட்சிக்கொடியேற்றி பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

திருச்சி கிழக்கு செல்கிறார் விஜய்! இன்றைய செய்திகள் மே 30 - நேரலை!

நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி!

பெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடை!
ஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!
விடியோக்கள்

ஆர்சிபிக்கு அநீதி?: சொந்த மண்ணில் கோப்பை வெல்லுமா குஜராத்?

”வட மாநிலத்தவர்களுக்கும் மகளிர் உரிமைத்தொகை? Full Report விரைவில்!”: அமைச்சர் மரிய வில்சன்!

UN Kannan Interview | F3 விவகாரம்.. எதிர்கொள்ளுமா இந்தியா?| Economic crisis | PM Modi | Rahul |India


