உ.பி.யில் கனமழையால் 89 பேர் பலி! ரஷிய அதிபர் புதின் இரங்கல்!செய்தித்துறை இயக்குநராக அருண் தம்புராஜ் நியமனம்!கேரளத்தில் காங்கிரஸ் சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக வி.டி. சதீசன் தேர்வு!பருத்திக்கான இறக்குமதி வரியை ரத்து செய்யக்கோரி பிரதமர் மோடிக்கு முதல்வர் விஜய் கடிதம்!பதவி ஆசை பிடித்தவர்களின் இழிசெயலை முறியடிப்போம்: எடப்பாடி பழனிசாமி!கேரள மார்க்சிஸ்ட் கம்யூ. சட்டப்பேரவைக் கட்சித் தலைவராக பினராயி விஜயன் தேர்வு!
/

புளியங்குடி முப்பெருந்தேவியர் கோயிலில் திருவிளக்கு பூஜை

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகே முப்பெருந்தேவியர் கோயிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாககன்னி

Updated On :23 ஜனவரி 2019, 6:06 am IST

புளியங்குடி அரசு மருத்துவமனை அருகே முப்பெருந்தேவியர் கோயிலில் உள்ள பெரியபாளையத்து பவானி அம்மன், நாககன்னி அம்மன், பால நாகம்மன் கோயிலில்  பௌர்ணமி திருவிளக்கு பூஜை  நடைபெற்றது.
இதையொட்டி, கோயிலில் மாலை 6 மணிக்கு முப்பெருந்தேவி அம்மனுக்கு 18 வகையான அபிஷேகமும், உலக நன்மைக்காகவும், மழை வேண்டியும் 1008 லிட்டரில் சிறப்பு பாலபிஷேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து முப்பெருந்தேவியருக்கு சிறப்பு அலங்காரமும்,பெரிய தீபாராதனையும் நடைபெற்றன. இரவு 8 மணிக்கு பௌர்ணமி திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இதில் ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தீபம் ஏற்றி, பாடல்கள் பாடி வழிபட்டனர்.  பின்னர், அன்னதானம் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை கோயில் குருநாதர் சக்தியம்மா மற்றும் நிர்வாகத்தினர் செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.