தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: மகிழ்ச்சி அளிக்கிறது - ப.சிதம்பரம்அமைச்சரவையில் எந்தத் துறை அளித்தாலும் மகிழ்ச்சி: கிரிஷ் சோடங்கர்தமிழக அமைச்சரவையில் காங்கிரஸ்: அரசியல் நிகழ்வு அல்ல, உணர்வு! - மாணிக்கம் தாகூர்நீர்நிலைகளில் வண்டல் மண் எடுத்துச்செல்ல விவசாயிகளுக்கு அனுமதி!தவெக அமைச்சரவையில் காங்கிரஸின் ராஜேஷ் குமார், விஸ்வநாதனுக்கு அமைச்சர் பதவி! டிஜிபி வெங்கடராமன் உள்பட 15 ஐபிஎஸ் அதிகாரிகள் மாற்றம்!கேரளத்தில் சில்வர் லைன் அதிவேக ரயில் வழித்தட திட்டம் ரத்து தமிழகத்தின் 11 இடங்களில் 100 டிகிரி ஃபாரன்ஹீட்டை தாண்டி வெப்பநிலை பதிவு!
/

"மானிய விலை ஸ்கூட்டர்:  ஜன.31வரை விண்ணப்பிக்கலாம்'

மானிய விலை இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஜன.31 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

Updated On :23 ஜனவரி 2019, 7:52 am IST

மானிய விலை இருசக்கர வாகன திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க ஜன.31 வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் சதீஷ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: மானிய விலை இரு சக்கர வாகன திட்டத்தின் கீழ்  2018-2019ஆம் ஆண்டில் ஒரு லட்சம் உழைக்கும் மகளிருக்கு ஸ்கூட்டர் வழங்க இலக்கு நிர்ணயித்து 50 சதவீதம் மானியம் வழங்க அரசு ஆணை வெளியிடப்பட்டது.  இதற்கான விண்ணப்பங்கள் ஜன. 18ஆம் தேதி வரை பெறப்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது, கால அவகாசத்தை நீட்டித்து இம்மாதம்  31ஆம் தேதி மாலை 5  மணி வரை விண்ணப்பங்களை சம்பந்தப்பட்ட அலுவலகங்களில் பெற்று பூர்த்தி செய்து சமர்ப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.