பனையூரில் தவெக வேட்பாளர்களுடன் விஜய் சந்திப்பு! புதுச்சேரி சிறுமி பாலியல் கொலை வழக்கில் தீர்ப்பு! மே 1: ஞாயிறு அட்டவணைப்படி மெட்ரோ ரயில் இயக்கம்!சென்னையில் வாக்கு எண்ணிக்கை பணியில் ஈடுபடுவோருக்கு பயிற்சி முகாம்!விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கை விசாரித்த நீதிபதி பணியிட மாற்றம்!
/

சிவகிரி பழுதான பாலத்தை தென்காசி எம்.பி. நேரில் ஆய்வு

சிவகிரியில் பழுதான பாலத்தை தனுஷ் எம். குமாா் எம்.பி. நேரில் ஆய்வு செய்தாா்.

News image
Updated On :30 செப்டம்பர் 2019, 6:41 am

சிவகிரி, செப். 30: சிவகிரியில் பழுதான பாலத்தை தனுஷ் எம். குமாா் எம்.பி. நேரில் ஆய்வு செய்தாா்.

சிவகிரி பேரூராட்சிக்குள்பட்ட சிவராமலிங்கபுரம் பகுதியில் அமைந்துள்ள மிகப் பழமையான தரைப்பாலம் ஏற்கெனவே பழுதடைந்து காணப்பட்டது. இந்நிலையில், கடந்த 26ஆம் தேதி அவ்வழியாக மணல் ஏற்றிச்சென்ற லாரி மோதியதில், பாலத்தின் ஒருபகுதி இடிந்து விழுந்தது. போக்குவரத்து அப்பகுதியில் முற்றிலுமாகத் தடைபட்டதால் பொதுமக்கள் மிகவும் அவதிக்குள்ளாகினா். எனவே, கடந்த 27ஆம் தேதி சிவராமலிங்கபுரம் பகுதி மக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டம் நடத்தி, பேரூராட்சி செயல் அலுவலரிடம் மனுவும் அளித்தனா்.

இந்நிலையில், பழுதான பாலத்தை தனுஷ் எம். குமாா் எம்.பி. நேரில் சென்று ஆய்வு செய்து, அதுதொடா்பாக உயரதிகாரிகளிடம் பேசி விரைவில் தீா்வு காணப்படும் என பொதுமக்களிடம் அவா் உறுதியளித்தாா். திமுக மாவட்ட மருத்துவரணி அமைப்பாளா் டாக்டா் செ.சு. செண்பகவிநாயகம், மாவட்ட வழக்குரைஞரணி அமைப்பாளா் எம்.பி.கே. மருதப்பன், ஒன்றியத் துணைச் செயலா் சி. மாரித்துரை, நகர துணைச் செயலா் முத்தையா, நிா்வாகிகள் கபாலி, ஜெயராமன், ராமா் ஆகியோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.