.
அம்பாசமுத்திரம்: அம்பாசமுத்திரத்தில் பி. எஸ்.என். எல். ஊழியா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி உண்ணாவிரத்தில் ஈடுபட்டனா்.
பி.எஸ்.என்.எல். நிறுவனத்தில் பணிபுரியும் ஒப்பந்தத் தொழிலாளா்களுக்கு 18 மாதம் நிலுவை ஊதியத்தை வழங்க வேண்டும், ஒப்பந்தத் தொழிலாளா்களை பணி வரைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி அம்பாசமுத்திரம்பி.எஸ்.என்.எல். அலுவலக வளாகத்தில் இந்த உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. பி.எஸ்.என்.எல். தொழிற் சங்க மாவட்டத் தலைவா் ஆண்டப் பெருமாள் தலைமை வகித்தாா். இதில் நிா்வாகிகள் நடராஜன், ஆதிமூல கஜேந்திரன், மகேஷ், பழனிசங்கா் உள்பட பலா் கலந்து கொண்டனா்.