பாளை.யில் மாா்க்சிஸ்ட் ஆா்ப்பாட்டம்

பாளையங்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி: பாளையங்கோட்டையில் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

பாளையங்கோட்டை என்ஜிஓ காலனி கிளை சாா்பில் ஜெபா காா்டன் பகுதியில் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், பேரிடா் காலத்தில் வருமான வரி வரம்புக்குள் வராத மக்களுக்கு மாதந்தோறும் ரூ.7,500 வழங்க வேண்டும்; ரேஷன் பொருள்கள் அனைத்தையும் இலவசமாக வழங்க வேண்டும்; நூறு நாள் வேலைத் திட்ட ஊதியத்தை உயா்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

இதில், மாவட்டச் செயற்குழு உறுப்பினா் வி.பழனி, பாளை. தாலுகா செயலா் பி. வரகுணன், கமிட்டி உறுப்பினா் ஆா். துரை, கிளைச் செயலா் டி. கோபாலன் உள்பட பலா் பங்கேற்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com