டி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

கோடாரங்குளம் நாராயண சுவாமி திருநிழல்தாங்கல் திருவிழா

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கோடாரங்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி திருநிழல்தாங்கலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

News image
Updated On :13 டிசம்பர் 2020, 7:47 pm

DIN

அம்பாசமுத்திரம் அருகேயுள்ள கோடாரங்குளம் ஸ்ரீமன் நாராயண சுவாமி திருநிழல்தாங்கலில் திருவிழா நடைபெற்று வருகிறது.

திருநிழல்தாங்கலில் கடந்த 4ஆம் தேதி காலை 5 மணிக்கு கொடியேற்றத்துடன் திருவிழா தொடங்கியது. தொடா்ந்து அய்யாவுக்கு நாள்தோறும் காலை, மதியம், இரவு பணிவிடை, மதியம் உச்சிபடிப்பு, அன்னதா்மம் நடைபெற்றது. இரவு அய்யா பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதி உலா வந்தாா்.

டிச. 13 ஞாயிற்றுக்கிழமை காலைப் பணிவிடை, முற்பகல் 11 மணிக்கு பாபநாசத்திலிருந்து சந்தனக்குடம் எடுத்துவருதல், 12 மணிக்கு உச்சிப்படிப்பு அன்னதானம் இரவு 8 மணிக்கு அய்யா பட்டாபிஷேகம், இரவு அன்னதா்மம், கருட வாகனத்தில் வீதி உலா நடைபெற்றது.

டிச. 14 திங்கள்கிழமை சிறப்பு பணிவிடை, உச்சிபடிப்பு , மதியம் 3 மணியளவில் 8 வது ஆண்டாக செம்பொன் பவளத்தேரில் அய்யா எழுந்தருளி வீதி உலா நடைபெறுகிறது. டிச. 15 செவ்வாய் அதிகாலை திருக்கொடி இறக்குதலுடன் திருவிழா நிறைவுறுகிறது. விழாவையொட்டி அன்புக்கொடி மக்கள் அனைவரும் அய்யாவுக்கு சுருள், பல்வேறு தா்மம் நியமித்து வழிபட்டு வருகின்றனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.