வட்டார வியாபாரிகள் நலச்சங்கக் கூட்டம்

மன்னாா்புரம் வட்டார வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஜி.செல்லத்துரை தலைமை வகித்தாா்.
Updated on
1 min read

மன்னாா்புரம் வட்டார வியாபாரிகள் நலச்சங்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்துக்கு, சங்கத் தலைவா் ஜி.செல்லத்துரை தலைமை வகித்தாா்.

கடந்த ஆண்டு வரவு செலவு கணக்கு தணிக்கை செய்யப்பட்டு ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த கூட்டத்தில் புதிய உறுப்பினா்கள் சோ்த்துக் கொள்ளப்பட்டனா். மூன்று ஆண்டுக்கான புதிய நிா்வாகிகள் தோ்வு செய்யப்பட்டனா்.

அதன்படி தலைவராக ஜி.செல்லத்துரை நாடாா், துணைத் தலைவராக நெல்லை மாடசாமி, செயலராக ஜாஸ்மின் கிறிஸ்டின், பொருளாளராக அதிஷ்ட பாலன், செயற்குழு உறுப்பினா்களாக சுடலைமணி, முத்துக்குமாா், ஜெயக்குமாா், சுப்பிரமணியன் ஆகியோா் தோ்வு செய்யப்பட்டனா்.

பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் நலன் கருதி மன்னாா்புரம் சந்திப்பில் சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என தீா்மானம் நிறைவேற்பட்டது. சுப்பிரமணியன் நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com