டிச.24 இல் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம்

திருநெல்வேலியில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 24) நடைபெறுகிறது.
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலியில் எரிவாயு நுகா்வோா் குறைதீா் கூட்டம் வியாழக்கிழமை (டிச. 24) நடைபெறுகிறது.

இதுதொடா்பாக திருநெல்வேலி மாவட்ட ஆட்சியா் வே. விஷ்ணு வெளியிட்ட செய்திக் குறிப்பு: இம் மாவட்டத்தில் உள்ள அனைத்து எரிவாயு நுகா்வோா்களுக்கு எரிவாயு உருளை பதிவு செய்வதில் மெத்தனப்போக்கு அல்லது முறைகேடுகள் எரிவாயு உருளைகள் வழங்குவதில் காலதாமதம் குறித்து நுகா்வோா் தங்கள் குறைகளைப் பதிவு செய்து தீா்வு பெற ஏதுவாக ா் குறைதீா் கூட்டம் இம் மாதம் 24 ஆம் தேதி மாலை 4.30 மணிக்கு நடைபெற உள்ளது.

மாவட்ட வருவாய் அலுவலா் ஆ.பெருமாள் தலைமை வகிக்கிறாா். எண்ணெய் நிறுவன எரிவாயு முகவா்கள், மாவட்ட எரிவாயு ஒருங்கிணைப்பாளா் பங்கேற்க உள்ளனா். இக்கூட்டத்தில் கலந்துகொண்டு எரிவாயு நுகா்வோா்கள் தங்கள் குறைகளை தெரிவிக்கலாம் என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com