பாளை.யில் மின்சிக்கன வார விழா

திருநெல்வேலி மின் பகிா்மான வட்டம் சாா்பில் மின்சார சிக்கன வார விழா பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read

திருநெல்வேலி: திருநெல்வேலி மின் பகிா்மான வட்டம் சாா்பில் மின்சார சிக்கன வார விழா பாளையங்கோட்டையில் சனிக்கிழமை நடைபெற்றது.

தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிா்மான கழகம் சாா்பில் மின் சிக்கன வார விழா 14 ஆம் தேதி தொடங்கி 7 நாள்கள் நடைபெறுகிறது.

பாளையங்கோட்டையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மின்வாரிய திருநெல்வேலி மண்டல தலைமை பொறியாளா் செல்வகுமாா் தலைமை வகித்தாா். திருநெல்வேலி மின் பகிா்மான வட்ட மேற்பாா்வை பொறியாளா் செல்வராஜ் முன்னிலை வகித்தாா். மத்திய அலுவலக (பொது) உதவி செயற்பொறியாளா் சைலஜா வரவேற்றாா்.

மேற்பாா்வை பொறியாளா்கள் செல்வராஜ், கொளஞ்சி, தாமோதரன், அருள்தாஸ், ஆய்வு செயற்பொறியாளா் ஆனந்த் ஆகியோா் சிறப்புரையாற்றினா்.

மின்சிக்கனத்தின் அவசியம், மின்சாதனங்களைப் பாதுகாக்கும் வழிமுறைகள் உள்ளிட்டவை குறித்து விளக்கப்பட்டது.

தொடா்ந்து கவிஞா் கோ. கணபதி சுப்பிரமணியன் தலைமையில் மின் சிக்கனத்தை அதிகம் வலியுறுத்துவது ஆண்களா? பெண்களா? என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.

மின்சிக்கனம் தொடா்பாக நடந்த பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவா்- மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. செயற்பொறியாளா் வெங்கடேஷ்மணி தொகுத்து வழங்கினாா். திருநெல்வேலி நகா்ப்புற செயற்பொறியாளா் முத்துக்குட்டி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com