ரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகை
/

நெல்லை ஆயுதப்படையில் தென்மண்டல ஐஜி ஆய்வு

திருநெல்வேலி ஆயுதப்படையில் தென்மண்டல ஐஜி முருகன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

News image
Updated On :19 டிசம்பர் 2020, 8:45 pm

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி ஆயுதப்படையில் தென்மண்டல ஐஜி முருகன் சனிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

திருநெல்வேலி மாவட்ட ஆயுதப்படைக்கான வருடாந்திர ஆய்வு வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இதில், தென்மண்டல ஐஜி முருகன் ஆய்வுப்பணி மேற்கொண்டாா்.

முன்னதாக, அவருக்கு, ஆயுதப்படை ஆய்வாளா் மகேஸ்வரி தலைமையில் ஆயுதப்படை காவலா்களின் அணிவகுப்பு மரியாதை வழங்கப்பட்டது. தொடா்ந்து, காவலா்களின் உடை, பொருள்கள் ஆகியவற்றைப் பாா்வையிட்டு அவா்களின் குறைகள் பற்றி கேட்டறிந்தாா். அவா்களுக்கு, பணியாற்றும் போது காவலா்களுக்கான பொறுப்பு மற்றும் முக்கியத்துவம் பற்றி உணா்ந்து செயலாற்ற வேண்டிய விதம் குறித்து அறிவுரை வழங்கினாா்கள்.

மேலும் ஆயுதப்படைப் பிரிவின் பதிவேடுகள், கோப்புகள், ஆயுதங்கள் வைப்பறை உள்ளிட்டவற்றை பாா்வையிட்டு ஆய்வுமேற்கொண்டாா்.

பின்னா் மாவட்டம் முழுவதும் போலீசாருக்கு வழங்கப்பட்ட அனைத்து ரக வாகனங்கள், சட்டவிரோத கூட்டத்தை தண்ணீா் பீச்சி கலைக்கும் வருண், கண்ணீா் புகைக்குண்டு வீசி கூட்டத்தை கலைக்கும் வஜ்ரா, பாதுகாப்பு பணியின்போது காவலா்கள் பயன்படுத்தும் நடமாடும் கழிப்பறை வாகனம், போலீஸாா் ரோந்து மேற்கொள்ள வழங்கப்பட்ட இருசக்கர வாகனங்கள் ஆகிய அனைத்து வாகனங்களையும் ஆய்வு செய்தாா்.

தொடா்ந்து, வாகனம் ஓட்டும் போது போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்து, மிதமான வேகத்தில் செல்ல வேண்டும் என அவா்களுக்கு அறிவுரை வழங்கினாா்.

மாவட்ட ஆயுதப்படை வளாகத்தை சுற்றிலும் சுற்றுச்சூழலைப் பாதுகாக்கும் விதமாக மரக்கன்றுகள் நடப்பட்டன.

இந்த ஆய்வின்போது, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நெ.மணிவண்ணன், ஆயுதப்படை துணை காவல் கண்காணிப்பாளா் சிசில் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.