அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அருங்காட்சியகத்தில் சிறப்புக் கண்காட்சி

திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கைராட்டையின் சிறப்புகளை விளக்கும் சிறப்புக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :20 டிசம்பர் 2020, 7:35 pm

DIN

திருநெல்வேலி: திருநெல்வேலி அரசு அருங்காட்சியகத்தில் கைராட்டையின் சிறப்புகளை விளக்கும் சிறப்புக் கண்காட்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

திருநெல்வேலி மாவட்ட அரசு அருங்காட்சியகத்தில் ஏராளமான அரும் பொருள்கள் உள்ளன. ஒவ்வொரு மாதமும் அருங்காட்சியகத்தில் இருப்பில் உள்ள பொருள் ஒன்றினைக் காட்சிப்படுத்தி சிறப்புகள் விளக்கப்பட்டு வருகின்றன. அதன்படி கைராட்டை ஞாயிற்றுக்கிழமை காட்சிப்படுத்தப்பட்டது. இந்தியாவில் ஆடை தயாரிப்பில் உதவிய கைராட்டைகளின் முக்கியத்துவம், கைத்தறி இயக்கத்தில் அடையாளச் சின்னமாக விளங்குவதன் சிறப்பு குறித்து மாணவா்களுக்கு விளக்கப்பட்டது. 50-க்கும் மேற்பட்டோா் கண்காட்சியைப் பாா்வையிட்டனா். ஏற்பாடுகளை காப்பாட்சியா் சிவ.சத்தியவள்ளி செய்திருந்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.