மாநிலங்களவை அதிமுக வேட்பாளராக தம்பிதுரை அறிவிப்பு - பாமகவுக்கு ஒரு இடம்!முஸ்லிம்கள் கொல்லப்படுவதில் மேற்கு வங்கம் முதலிடம் - பாஜக குற்றச்சாட்டு! திருச்சி சிவா, பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் - மாநிலங்களவை திமுக வேட்பாளர்களாக போட்டியிடுகின்றனர்மாநிலங்களவை உறுப்பினர் ஆகிறார் பிகார் முதல்வர் நிதீஷ் குமார்?28 பேரவை, 1 மாநிலங்களவை : கூட்டணி பங்கீட்டில் மனநிறைவு - செல்வப்பெருந்தகைமாநிலங்களவைத் தேர்தலில் தேசியவாத காங்கிரஸ் கட்சியின் தலைவர் சரத் பவாருக்கு காங்கிரஸ் ஆதரவுஈரானின் புதிய தலைவரும் கொல்லப்படுவார்! இஸ்ரேல் எச்சரிக்கை விவசாயிகளின் பயிர்க் கடன் தள்ளுபடி செய்ய நடவடிக்கை! - விஜய் அறிவிப்புபங்குச் சந்தை கடும் வீழ்ச்சி! சென்செக்ஸ் 1,650 புள்ளிகள் சரிவு! ஹோர்முஸ் நீரிணை வழியாக பயணிக்கும் கப்பல்களுக்கு கடற்படை பாதுகாப்பு: டிரம்ப்!நுழைவு வாயிலிலேயே வாயில் நுழையாத பெயர்: முதல்வர் கண்டனம்!திருச்சி ரயில்வே அலுவலகத்துக்கு ஹிந்தி பெயர்! தமிழிசை செளந்தரராஜன் எதிர்ப்பு! கிரிக்கெட்டில் சிஎஸ்கேவையும், தேர்தலில் தவெகவையும் தொட முடியாது! விஜய் ஈரானைத் தாக்க உதவி மறுப்பு... ஸ்பெய்ன் உடனான வர்த்தகத்தைத் துண்டித்தார் டிரம்ப்!ஈரானின் புதிய உச்ச தலைவராக கமேனியின் மகன் மோஜ்தபா தேர்வு!
/

களக்காடு தலையணையை திறக்க சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தல்

களக்காடு தலையணையை திறக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

News image
Updated On :25 டிசம்பர் 2020, 6:26 pm

DIN

களக்காடு தலையணையை திறக்க வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

களக்காடு மலைப்பகுதியில் தலையணை அமைந்துள்ளது. இங்குள்ள பச்சையாற்றில் குளிப்பதற்காக தமிழகத்தில் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வருகை தருகின்றனா். கரோனா தொற்று

காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டதால், நிகழாண்டு மாா்ச் மாதம் இறுதியில் தலையணை மூடப்பட்டது.

பச்சையாற்றில் கடந்த 2 மாதங்களாக நீா்வரத்து இருந்த போதிலும் தடை அமலில் இருப்பதால் பல்வேறு பகுதிகளில் இருந்து வருகை தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்லும் நிலை உள்ளது.

தலையணையில் குளிக்க தடை இருப்பதால், இந்த அணைக்கு கீழ்பகுதியில் உள்ள சிவபுரம் ஆற்றில் குளிக்க சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் குவிந்து வருகின்றனா்.

தலையணை மூடப்பட்டுள்ளதால் அரசு வருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது. தற்போது பொது முடக்கத்தில் தளா்வுகள் அளிக்கப்பட்டுள்ளதால் தலையணையை திறந்த வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுற்றுலாப் பயணிகள் வலியுறுத்தியுள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.